12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600-க்கு 599 மதிப்பெண்கள் பெற்று அசத்திய பழனி மாணவி.. குவியும் பாராட்டுக்கள்!
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி என்பவர் இன்று வெளியான ப்ளஸ் 2 தேர்வில் 600-க்கு 599 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 08) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். இதில், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி, இன்று வெளியான 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600-க்கு 599 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் ஆங்கிலத்தில் மட்டும் 99 மதிப்பெண்களும் மற்ற பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார்.
600க்கு 599 மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து மகிழந்தனர். மாணவி ஓவியாஞ்சலியை கட்டித் தழுவி பாராட்டுத் தெரிவித்தனர். மாணவியின் சாதனையை பாராட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விபரம்:
- தமிழ் - 135
- இயற்பியல் - 1,125
- வேதியியல் - 3,181
- உயிரியல் - 827
- கணிதம் - 3.022
- தாவரவியல் - 269
- விலங்கியல் - 36
- கணினி அறிவியல் - 9,536
- வணிகவியல் - 1,624
- கணக்குப் பதிவியல் - 1,240
- பொருளியல் - 556
- கணினிப் பயன்பாடு - 4,208
- வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் - 273
மேலும் படிக்க | தமிழ்நாடு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்.. அதிகம் தேர்ச்சி பெற்ற முதல் 5 மாவட்டங்கள் எது தெரியுமா? - விபரம் இதோ!