12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600-க்கு 599 மதிப்பெண்கள் பெற்று அசத்திய பழனி மாணவி.. குவியும் பாராட்டுக்கள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600-க்கு 599 மதிப்பெண்கள் பெற்று அசத்திய பழனி மாணவி.. குவியும் பாராட்டுக்கள்!

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600-க்கு 599 மதிப்பெண்கள் பெற்று அசத்திய பழனி மாணவி.. குவியும் பாராட்டுக்கள்!

Karthikeyan S HT Tamil
Published May 08, 2025 12:14 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி என்பவர் இன்று வெளியான ப்ளஸ் 2 தேர்வில் 600-க்கு 599 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600-க்கு 599 மதிப்பெண்கள் பெற்று அசத்திய பழனி மாணவி.. குவியும் பாராட்டுக்கள்!
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600-க்கு 599 மதிப்பெண்கள் பெற்று அசத்திய பழனி மாணவி.. குவியும் பாராட்டுக்கள்!

600க்கு 599 மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து மகிழந்தனர். மாணவி ஓவியாஞ்சலியை கட்டித் தழுவி பாராட்டுத் தெரிவித்தனர். மாணவியின் சாதனையை பாராட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விபரம்:

  • தமிழ் - 135
  • இயற்பியல் - 1,125
  • வேதியியல் - 3,181
  • உயிரியல் - 827
  • கணிதம் - 3.022
  • தாவரவியல் - 269
  • விலங்கியல் - 36
  • கணினி அறிவியல் - 9,536
  • வணிகவியல் - 1,624
  • கணக்குப் பதிவியல் - 1,240
  • பொருளியல் - 556
  • கணினிப் பயன்பாடு - 4,208
  • வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் - 273

மேலும் படிக்க | தமிழ்நாடு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்.. அதிகம் தேர்ச்சி பெற்ற முதல் 5 மாவட்டங்கள் எது தெரியுமா? - விபரம் இதோ!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 08) வெளியானது. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். தேர்வு முடிவுகளை, results.digilocker.gov.in, tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்தாண்டு தேர்ச்சி சதவிகிதம் 95.03% ஆக உள்ளது. மொத்தம் 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 7,53,142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் மார்ச் 25 வரை நடைபெற்றது. இத்தேர்வை மொத்தம் 8,02,568 மாணவர்கள் எழுதினர். இதில் 18,344 தனித்தேர்வர்கள் மற்றும் 145 சிறைவாசிகளும் அடங்குவர். தேர்வு மொத்தம் 3,316 மையங்களில் நடத்தப்பட்டது. 7,518 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

முதல் நாள் தமிழ் தேர்வில் 11,430 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வு காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:15 மணி வரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்கின. அந்த பணிகளும் நிறைவு பெற்று மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன.