Anna University: ‘காதலன் கண்முன்னே மாணவிக்கு வன்கொடுமை!’ அண்ணா பல்கலை.யில் அதிர்ச்சி சம்பவம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Anna University: ‘காதலன் கண்முன்னே மாணவிக்கு வன்கொடுமை!’ அண்ணா பல்கலை.யில் அதிர்ச்சி சம்பவம்!

Anna University: ‘காதலன் கண்முன்னே மாணவிக்கு வன்கொடுமை!’ அண்ணா பல்கலை.யில் அதிர்ச்சி சம்பவம்!

Kathiravan V HT Tamil
Dec 25, 2024 12:20 PM IST

காதலன் உடன் மாணவி ஒருவர் பேசிக் கொண்டு இருந்து உள்ளார். அப்போது அங்கே வந்த 2 இளைஞர்கள் மாணவனை தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுகை செய்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Anna University: ‘காதல் கண்முன்னே கற்பழிக்கப்பட்ட மாணவி!’ அண்ணா பல்கலை.யில் அதிர்ச்சி சம்பவம்!
Anna University: ‘காதல் கண்முன்னே கற்பழிக்கப்பட்ட மாணவி!’ அண்ணா பல்கலை.யில் அதிர்ச்சி சம்பவம்!

மாணவி ஒருவருக்கு பாலியல் தாக்குதல் நடைபெற்றதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலன் உடன் மாணவி ஒருவர் பேசிக் கொண்டு இருந்து உள்ளார். அப்போது அங்கே வந்த 2 இளைஞர்கள் மாணவனை தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுகை செய்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளதாகவும் கூறி உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்

இந்த விவகாரம் தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் ட்வீட் செய்துள்ள எடப்பாடி பழனிசாமி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் , இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தலைநகரின் மையத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது. டெல்லியில் நிர்பயா சம்பவம் நடந்து 12 ஆண்டுகள் கழித்து, அதே போன்று ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடப்பது என்பது, சட்டம் ஒழுங்கை திரு. ஸ்டாலின் பின்நோக்கி தள்ளியிருப்பதையே காட்டுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதை தொடர்ந்து நான் சுட்டிக்காட்டிய போதெல்லாம் அதனை எப்படி மறுப்பது என்பதில் மட்டுமே முனைப்பாக இருந்த திரு.மு.க.ஸ்டாலினின் மாடல் அரசு, எனது குற்றச்சாட்டின் தீவிரம் உணர்ந்து கொஞ்சமாவது செயல்பட்டிருந்தால், இதுபோன்ற பல சம்பவங்களை தடுத்திருக்கலாம்.

 

பெண்கள் படிப்பு மற்றும் பணியிடங்களில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை கெடுத்துள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்வதுடன், அவர்களுக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறும், மாநிலம் முழுவதும் பெண்கள் பாதுகாப்பிற்கான காவல் பணிகளை வலுப்படுத்துமாறும் திரு. ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்து உள்ளார்.

அண்ணாமலை கண்டனம்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வலைத்தள பதிவில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி ஒருவருக்குப் பாலியல் தாக்குதல் நடைபெற்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து விட்டது. தினமும் படுகொலைச் சம்பவங்கள், போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு, பொதுமக்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத இருண்ட காலத்தில் இருப்பது போன்ற சூழ்நிலையில் தமிழகம் தற்போது இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. குறிப்பாக, குற்றவாளிகள் திமுகவினர் என்றால், அவர்கள் மீதான நடவடிக்கை தாமதப்படுத்தப்படுகிறது.

மாநிலத் தலைநகரத்தின் மையப்பகுதியில், பொறியியல் கல்வி தலைமை நிறுவன வளாகத்தின் உள்ளே, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது என்றால், சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ எந்த பயமும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநகர காவல்துறையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரும், மாணவி மீதான பாலியல் தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்று, பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்து உள்ளார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.