’திமுக ஆட்சியில் தொழில் துறை வளர்ச்சி வெறும் பேப்பர் அளவில்தான் உள்ளது’ எடப்பாடி பழனிசாமி கவலை!
தமிழ்நாடு இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியில் முன்னணியில் இருக்க முடியும் எனவும், ‘காகிதங்களில் உள்ள ஒப்பந்தங்களில் இருந்து தொழிற்சாலைகளுக்கு’ நகர வேண்டிய நேரம் இது எனவும் எடப்பாடி பழனிசாமி கருத்து

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி வெறும் காகித பக்கங்களில் வடிவில்தான் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவலை தெரிவித்து உள்ளார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில ஊடகத்திற்கு அவர் எழுதி உள்ள கட்டுரையிக் தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் தேக்கநிலை, முக்கிய திட்டங்களில் மந்தநிலை, மற்றும் முதலீடுகளின் பற்றாக்குறை ஆகியவற்றை அவர் விமர்சித்து, அதிமுகவின் முந்தைய சாதனைகளையும், தொழில்துறையை மீட்டெடுக்க முன்மொழியப்பட்ட திட்டங்களையும் விமர்சித்து கருத்து தெரிவித்து உள்ளார்.
திமுக அரசின் தவறவிட்ட வாய்ப்புகள்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.6.64 லட்சம் கோடி மதிப்பிலான தொழில்துறை முதலீடுகளை ஈர்த்ததாக அறிவித்திருந்தாலும், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் (Q4 2023-2024) தரவுகளின்படி, உண்மையான முதலீடு இதில் கால் பங்குக்கு குறைவாகவே உள்ளது. மீதமுள்ளவை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் அறிவிப்புகளாக மட்டுமே உள்ளன. இது தமிழ்நாட்டின் தொழில்மயமாக்கல் முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.