Seeman : ‘3000 பேர் இணைவார்கள் என்பது நேற்றே எப்படி தெரிந்தது?’ கோவையில் சீமான் கேள்வி!
‘பெரியார் ஒழிக என்பது என் கோட்பாடு அல்ல, பிரபாகரன் வாழ்க என்பது தான் என் கோட்பாடு. தீவிரவாதி என்று சொல்லும் பிரபாகரனை பற்றி பேசி 30 லட்சம் வாக்குகளை வாங்கி மூன்று சக்தியாக வந்துள்ளேன்’

கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்கள் இதோ:
‘‘திமுகவில் 3000 பேர் இணைவார்கள் என்று, நேற்றே எப்படி தெரிந்தது? சேர்ந்த பிறகு தானே எண்ணிக்கை தெரியும். இன்று சேரப் போகும் நபர்கள் பற்றி, நேற்றே எப்படி தெரிந்தது? நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள். திமுகவையும் சேர்த்து நாங்கள் தான் வளர்கிறோம். பெரியாரை விமர்சித்து அண்ணா, கருணாநிதி பேசி உள்ளார்கள். திகவில் இருந்து திமுக பிரிய காரணம் என்ன? பெரியாரை எதிர்த்து அண்ணா பேசினார். பெரியாரை விமர்சித்து கருணாநிதி பேசியதில் ஒரு துளி கூட நான் பேசவில்லை.
பிரபாகரனை நான் சந்திக்கவே இல்லை
நான் பிரபாகரனின் ரத்த உறவு அல்ல, லட்சிய உறவு. அவரது லட்சியத்திற்காக நாங்கள் தான் நிற்கிறோம். பிரபாகரனின் அண்ணன் மகனுக்கு, உலகம் முழுவதும் உள்ள என் சொந்தங்கள் பதில் சொல்வார்கள். பிரபாகரன் உடன் நான் சந்தித்ததை வைத்து பலரும், பலவித தகவல்களை கூறுகின்றனர். நான் பிரபாகரனை சந்திக்கவில்லை. ஒருவர் 8 நிமிடம் தான் சந்தித்ததாக கூறுகிறார். ஒருவர் போட்டோ எடிட் செய்ததாக கூறுகிறார். நான் பிரபாகரனை சந்திக்கவில்லை என கூறுகிறேன்.