NIA : எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் முபாரக் வீட்டில் என்ஐஏ சோதனை நிறைவு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Nia : எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் முபாரக் வீட்டில் என்ஐஏ சோதனை நிறைவு

NIA : எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் முபாரக் வீட்டில் என்ஐஏ சோதனை நிறைவு

Priyadarshini R HT Tamil
Published Jul 23, 2023 10:17 AM IST

NIA : நெல்லையில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக சோதனை அதிகாலை முதல் நடைபெற்று வந்தது. பின்னர் 10 மணியளவில் சோதனை நிறைவு பெற்றது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் இருந்து வந்துள்ள 5க்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் காலை 5 மணி முதலே சோதனை நடத்தினர். தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளட்ட 9 மாவட்டங்களிலும் என்ஐஏ சோதனை நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் இந்து முன்னணி பிரமுகரான இவர் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்து. 11 பேரை கைது செய்திருந்தனர்.

இதற்கிடையில் இந்த வழக்கு அதே ஆண்டு மார்ச் 14ம் தேதி தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது. இதனிடையே நெல்லை மாவட்டம் தென்காசி செய்யது குருக்கள் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அகமது சாலிக் (51) என்பவரை தேசிய புலனாய்வு துறையினர் அந்தாண்டு ஜீன் மாதம் 27ம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில் 03.07.2019 அன்று தென்காசியில் உள்ள அவரது வீட்டில் தேசிய புலனாய்வு துறையினர் திடீர் சோதனை நடத்தினர். 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையின்போது என்னென்ன கிடைத்தது என்பது குறித்த தகவலை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர். சோதனை நடந்த தெரு பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அதிகளவு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தாலும் அந்த பகுதியில் மக்கள் நடமாட்டத்தை தடை செய்தாலும் அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் அந்தாண்டு மே மாதத்தில் தஞ்சாவூர், திருச்சி, காரைக்கால் ஆகிய இடங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மாவட்ட அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். குழுக்களாகப் பிரிந்து, NIA அதிகாரிகள் தேடுதல் வாரண்டுகளுடன் ஆயுதம் ஏந்தியபடியும், உள்ளூர் காவல்துறையின் பாதுகாப்போடும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர் . காரைக்காலில் உள்ள முகமது ஹசன் குத்தூஸ் என்பவரின் வீட்டில் என்ஐஏ சோதனை நடத்தியதாகவும், கணக்கில் வராத பணம் தவிர ஹார்ட் டிஸ்க், லேப்டாப் மற்றும் புத்தகங்களை கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டது. ராமலிங்கம் கொலையில் குத்தூஸ் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது நெல்லையில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் காலை 10 மணி வரை சோதனை நடத்தினர்.