NEET : நீட் தேர்வை முற்றிலுமாக ஒழித்து கட்ட வேண்டும்.. இந்தியா கூட்டணியின் நிலைப்பாடு இதுதான் - அமைச்சர் அன்பில் மகேஷ்!
Minister Anbil Mahesh : நீட் தேர்வை முற்றிலுமாக அகற்றுவதற்கு தமிழக முதல்வரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ஒவ்வொரு நிலையிலும் முயற்சித்து வருகின்றனர். அவர்கள் வழியில் தொடர்ந்து நீட் தேர்வை நாங்களும் எதிர்ப்போம் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

நீட் தேர்வை முற்றிலுமாக ஒழித்து கட்ட வேண்டும் என்பது தான் இந்தியா கூட்டணியின் நிலைப்பாடு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கலைஞர் நூலகம் திறக்கப்பட்டது
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திமுக மாவட்ட மாநகர இளைஞரணி சார்பில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரகநேறி பகுதியில் கலைஞர் நூலகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,” இந்தியா கூட்டணியில் உள்ள அனைவரும் சொன்ன ஒரே வார்த்தை.நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிர்ப்பான ஒரு திட்டம். உடனடியாக அதனை ஒழித்து விட வேண்டும் என கூறுகின்றனர்.