‘திமுக ஏஜென்ட்டுகள்.. உங்கள் கூடாரத்தை விரட்டியடிப்போம்..’ நயினார் நாகேந்திரன் சூடான அறிக்கை!
இந்த கூட்டணிதான் தமிழக பெண்களின் மாண்பை கழுவிலேற்றிய கயவர்களை அமைச்சர்களாகக் கொண்ட ஒரு கேடு கெட்ட ஆட்சியை வேரறுக்கப் போகிறது! முதல்வர் ஸ்டாலின் அவர்களே! இந்த கூட்டணிதான் மக்களோடு மக்களாக நின்று உங்கள் கூடாரத்தையே விரட்டியடிக்கப் போகிறது!

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன், தன்னுடை எக்ஸ் பக்கத்தில் பதிலடி ஒன்றை பதிவு செய்துள்ளார். அதிமுக-பாஜக கூட்டணி குறித்து முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அதற்கு பதிலடியாக இந்த அறிக்கையை நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ:
இந்த கூட்டணி தான் உங்கள் கூடாரத்தை
‘‘நம்மைப் பார்த்து “பொருந்தாக் கூட்டணி” என்கிறார்களாம் சில திமுக ஏஜென்ட்டுகள்! ஆம்! இது திமுகவுக்கு பொருந்தாக் கூட்டணிதான்! ஏனென்றால், இந்த கூட்டணிதான் மக்களை சுரண்டிக் கொழுக்கும் ஸ்டாலின் அவல ஆட்சியை வீட்டிற்கு அனுப்பப் போகிறது!
இந்த கூட்டணிதான் தமிழக பெண்களின் மாண்பை கழுவிலேற்றிய கயவர்களை அமைச்சர்களாகக் கொண்ட ஒரு கேடு கெட்ட ஆட்சியை வேரறுக்கப் போகிறது! முதல்வர் ஸ்டாலின் அவர்களே! இந்த கூட்டணிதான் மக்களோடு மக்களாக நின்று உங்கள் கூடாரத்தையே விரட்டியடிக்கப் போகிறது!
யாராலும் மாற்ற முடியாது
இந்த உண்மை உங்களுக்கும் தெரிந்திருப்பதால் மரண பயம் கண்ணில் தெரிகிறது போலும்! பதற்றம் வேண்டாம், ஐயா ஸ்டாலின் அவர்களே! இன்னும் ஒரு வருட காலமிருக்கிறது.
அதுவரை ஆடுங்கள்! ஆனால், மக்கள் வாயிலாக மகேசன் உங்களுக்கு அளிக்க உள்ள தீர்ப்பினை யாராலும் மாற்ற முடியாது!’’ என்று அந்த அறிக்கையில் நயினார் நாகேந்திரன் திமுகவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
