தமிழ்நாடு அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்.. துரைமுருகன், ரகுபதியின் இலாக்காக்களை மாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழக அமைச்சரவை இன்று (மே 08) மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவை இன்று (மே 08) மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அமைச்சர் ரகுபதி வசம் இருந்த சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் துறைகள் மாற்றம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாக, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமைச்சர் துரைமுருகன், நீர்வளத்துறையுடன் சட்டத்துறையையும் கவனிப்பார் என்றும் அமைச்சர் ரகுபதி இனி கனிமவளத்துறையை கவனிப்பார் என்றும் கூறப்படுகிறது.
அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகள் தேர்தலுக்கு பரபரப்பாக தயாராகி வருகின்றன. இந்த சூழலில், கடந்த வாரம் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி, பொன்முடி வகித்த வனத்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை, அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மனோ தங்கராஜ் மீண்டும் பால்வளத்துறை அமைச்சரானார்.
மீண்டும் அமைச்சரவை மாற்றம்
இத்தகைய சூழலில் தமிழக அமைச்சரவையில் இன்று (மே 08) மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகனிடமிருந்த கனிமவளத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதே போல, அமைச்சர் ரகுபதி வசமிருந்த சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டிருப்பது அரசியல் விமர்சகர்கள் மத்தியல் கவனத்தை ஈர்த்துள்ளது.
