தொடரும் அமைச்சர் வழக்குகள்! அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா? தமிழ்நாட்டின் ஆளும் கட்சியின் நிலை என்ன?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தொடரும் அமைச்சர் வழக்குகள்! அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா? தமிழ்நாட்டின் ஆளும் கட்சியின் நிலை என்ன?

தொடரும் அமைச்சர் வழக்குகள்! அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா? தமிழ்நாட்டின் ஆளும் கட்சியின் நிலை என்ன?

Suguna Devi P HT Tamil
Published Apr 25, 2025 05:23 PM IST

கடந்த சில மாதமாகவே தமிழக அமைச்சரவையில் இருக்கும் ஒவ்வொரு அமைச்சராக வழக்குகளில் சிக்கி எதிர்பாராத அதிரடி நீதிமன்ற உத்தரவுகளால் திண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக இனி இருக்கும் இந்த ஒரு வருடத்தில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடரும் அமைச்சர் வழக்குகள்! அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா? தமிழ்நாட்டின் ஆளும் கட்சியின் நிலை என்ன?
தொடரும் அமைச்சர் வழக்குகள்! அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா? தமிழ்நாட்டின் ஆளும் கட்சியின் நிலை என்ன?

அமைச்சர்களும் அவர்கள் சந்திக்கும் வழக்குகளும்

கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு பணி வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அதற்கு நடுவே 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்த போது செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தொடர் முயற்சியின் முடிவாக 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீன் பெற்றார். மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். இந்த நிலையில் "அமைச்சர் பதவியில் நீடிக்க விரும்புகிறீர்களா, அல்லது மறுபடியும் சிறைக்கு செல்லாமல் சுதந்திரமாக இருக்க விரும்புகிறீர்களா?" என்று சட்டவிரோத பணப்பறிமாற்ற தடை சட்ட வழக்கில் சிக்கி உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும் அமைச்சர் பொன்முடி பேசிய சர்ச்சை பேச்சு தொடர்பாக ஒரு வழக்கும் விசாரிக்கப்பட்டது. மேலும் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது ரூபாய் 3 கோடி வரை சொத்து சேர்த்ததாக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி, அவரது மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்தது. இந்த நிலையில் அவரது குடும்பம் மற்றும் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்டமனுவினை விசாரித்த கடலூர் நீதிமன்றம் எம் ஆர் கே பன்னீர்செல்வம் உட்பட மூன்று பேரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது. அமைச்சர் துரைமுருகன் சொத்து குவிப்பு வழக்கும் உள்ளது. என அமைச்சகர்களை வழக்குகள் துரத்திக் கொண்டிருக்கின்றன.

கடந்த 2006 - 2011 திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பதவி வகித்த அமைச்சர் துரைமுருகன், 2007 - 2009 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.40 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

அமைச்சரவையில் மாற்றம்?

அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகள் எதிர்மறையான திசையில் செல்வதால் மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமைச்சர்களின் குற்றப் பின்னணி தெரிந்தும் பதவி கொடுத்த திமுக மீதும் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தேர்தல் நடக்க ஒரே ஆண்டு உள்ள சமயத்தில் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் அடுத்தடுத்து வழக்குகளில் சிக்குவது திமுகவிற்கு நல்லதல்ல. இது வேறு கட்சிகளை பலப்படுத்தும். ஆளும் கட்சியின் நிலை மாற அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

Suguna Devi P

TwittereMail
சுகுணா தேவி பி, கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு ஊடகம், மொழிபெயர்ப்பு துறை மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தேசம், லைப்ஸ்டைல் சர்வதேசம், சினிமா உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் ஆங்கில இலக்கியத் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர், விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் 2018-2019 ஆம் ஆண்டு பணியாற்றியுள்ளார். மேலும் ஈடிவி பாரத் தமிழ், தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான இதழ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.