விஜய்க்கு சவால்: ’வெளியில் வந்து பேசினால் பதில் சொல்ல தயார்!’ தவெக தலைவர் விஜய்க்கு அமைச்சர் சேகர்பாபு சவால்!
”ஒரு விபத்து ஏற்பட்டா கூட சாபக்கேடுன்னு வந்துவிடுவார், அவர் பேசுவதற்கு முன் அந்த விவகாரம் தானக கனிதால், அவர்தான் கனிய வைத்தாக சொல்லுவார். மரத்துல காயாக இருந்தால் அதுக்கு காரணம் இந்த ஆட்சி என்று சொல்லுவார்”

தவெக தலைவர் விஜய் வெளியே வந்து பேசினால் பதில் சொல்லத் தயாராக உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார். அரசு ஊழியர்கள் நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக தவெக தலைவர் விஜய் கூறி உள்ளது குறித்த கேள்விக்கு இந்த பதிலை தெரிவித்தார்.
மக்கள் முதல்வரின் மனிதநேய திருநாள் திட்டத்தின் கீழ் நடைபெறும் 73 நிகழ்ச்சிகள் குறித்து பேசிய அவர், இத்திட்டம் கருணை இல்லங்கள், விழி இழந்தோர், மூத்தோர், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு உதவி வழங்குவதாகக் குறிப்பிட்டார்.
"பிப்ரவரி 20 அன்று கொளத்தூரில் துவங்கப்பட்ட அமுத கரங்கள் நிகழ்ச்சி, தினமும் 1200-க்கும் மேற்பட்டோருக்கு இரு இடங்களில் காலை சிற்றுண்டி வழங்குகிறது," என்று அமைச்சர் தெரிவித்தார். "இன்று தங்கசாலை மற்றும் அன்னை சத்யாநகர் குடியிருப்பில் 63-வது நிகழ்ச்சியாக இந்த உணவு வழங்கல் நடைபெற்றது. இதுபோன்ற அறப்பணிகளில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது," என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
சித்திரை திருவிழா ஏற்பாடுகள்
சித்திரை திருவிழா ஏற்பாடுகள் குறித்து பேசிய சேகர்பாபு, "பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு, எந்தக் குறையும் இல்லாமல் திருவிழாவை நேர்த்தியாக நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஞாயிறு, பொதுப்பணித்துறை அமைச்சர், அண்ணன் மூர்த்தி, தியாகராஜன் ஆகியோருடன் ஆய்வு செய்தோம். சாலைகள் சீரமைப்பு, பள்ளங்கள் நிரப்புதல் உள்ளிட்ட பணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்றார்.
அண்ணாமலைக்கு குற்றச்சாட்டுக்கு பதில்
வண்ணாரப்பேட்டை அரசு மருத்துவமனையில் மின்சார தடை குறித்து அண்ணாமலையின் விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், ”ஒரு விபத்து ஏற்பட்டா கூட சாபக்கேடுன்னு வந்துவிடுவார், அவர் பேசுவதற்கு முன் அந்த விவகாரம் தானக கனிதால், அவர்தான் கனிய வைத்தாக சொல்லுவார். மரத்துல காயாக இருந்தால் அதுக்கு காரணம் இந்த ஆட்சி என்று சொல்லுவார்” என்றார். மேலும் மின்தடை இயற்கையானது. உடனடியாக சரி செய்யப்பட்டுவிட்டது. மீண்டும் மின்வெட்டு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.
காஷ்மீர் தாக்குதல் குறித்த கேள்விக்கு, "தமிழர்களின் பாதுகாப்பிற்கு முதலமைச்சர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பார்," என்று உறுதியளித்தார். மேலும், அரசு ஊழியர்கள் குறித்த தவெக தலைவர் விஜயின் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில், "அவர் எங்கே வந்து சொன்னாரு? வெளியே வந்து சொல்லட்டும், பதில் சொல்கிறோம்!" என்று விஜய்க்கு சவால் விடுத்தார்.
