தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Minister M. Subramanian's Response To O. Panneer Selvam's Question In The Tamil Nadu Legislative Assembly Did Not Make People Laugh.

கொரோனா Bill கேட்ட OPS! மா.சு பதிலால் பேரவையில் சிரிப்பலை!

Kathiravan V HT Tamil
Mar 29, 2023 11:12 AM IST

கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உணவு வங்கிய ஓட்டல்களுக்கு இன்னும் பில்கள் செட்டில் செய்யப்படவில்லை என ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ
அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ

ட்ரெண்டிங் செய்திகள்

இன்றைய தினம் காலையில் நீர்வளம் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மானிய கோரிக்கையும், மாலையில் இயக்கூர்திகள் துறையின் மானிய கோரிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய கேள்வி நேரத்தின் போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் “கடந்த கொரோனா தொற்று காலத்தில் தொண்டுள்ளத்தோடு மருத்துவ பணி செய்த டாக்டர்களுக்கும் செவிலியர்களுக்கும் உணவு வழங்கிய ரெஸ்டாரண்டுகளுக்கு இன்னும் உரிய பணம் தரவில்லை என்ற செய்தி என்னிடம் தரப்பட்டது. இது குறித்து அமைச்சரிடம் அறிய விரும்புகிறேன்” என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில் ஏற்கெனவே சட்டமன்றத்தில் இது பற்றி விவாதித்துள்ளோம். நியாமான கட்டணத்தில் நியாமான உணவை வழங்கிய நியாமான பில்களை செட்டில் செய்துவிட்டோம். 

அநியாயமான முறையில் (பேரவையில் சிரிப்பலை) ஓட்டலே இல்லாமல் உணவை கொடுத்ததாக சொல்லப்பட்டவர்களுக்குத்தான் பில்கள் செட்டில் செய்யாமல் வைத்துள்ளோம். அதுவும் கூட ஆய்வு செய்யப்பட்டுள்ளது. உண்மையிலேயே உணவை வழங்கி இருந்தால் பில் நிச்சயமாக செட்டில் செய்யப்படும் என்றார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்