’ராமாயணத்திலேயே பெண்ணை தூக்கி சென்றார்கள்’ பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு துரைமுருகன் பதில்! காரசார விவாதம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’ராமாயணத்திலேயே பெண்ணை தூக்கி சென்றார்கள்’ பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு துரைமுருகன் பதில்! காரசார விவாதம்!

’ராமாயணத்திலேயே பெண்ணை தூக்கி சென்றார்கள்’ பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு துரைமுருகன் பதில்! காரசார விவாதம்!

Kathiravan V HT Tamil
Published Apr 28, 2025 01:34 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகின்றது. இதில் பெண்கள் பாதுகாப்பு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கும், அமைச்சர்களுக்கும் காரசார விவாதம்

’ராமாயணத்திலேயே பெண்ணை தூக்கி சென்றார்கள்’ பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு துரைமுருகன் பதில்! காரசார விவாதம்!
’ராமாயணத்திலேயே பெண்ணை தூக்கி சென்றார்கள்’ பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு துரைமுருகன் பதில்! காரசார விவாதம்!

திமுக-பாஜக இடையே காரசார விவாதம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகின்றது. இதில் பெண்கள் பாதுகாப்பு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கும், அமைச்சர்களுக்கும் காரசார விவாதம் ஏற்பட்டது.

தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மாறி வருவதாக வானதி சீனிவாசன் குற்றம் சாட்டிய நிலையில், இதற்கு அமைச்சர்கள் துரைமுருகன், கீதா ஜீவன், மற்றும் ரகுபதி ஆகியோர் பதிலளித்தனர். குறிப்பாக, அமைச்சர் துரைமுருகன், “ராமாயணத்திலேயே பெண்ணைத் தூக்கிச் சென்றனர்; நல்லவர்கள், கெட்டவர்கள் எல்லா இடத்திலும் உள்ளனர். முக்கியம் நடவடிக்கை தான்,” என வாதிட்டார்.

தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமா?

காவல்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், வானதி சீனிவாசன் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். அனைத்து பெண்களுக்கும், தனக்கு வழங்கப்படுவது போலவே பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, சட்டமன்ற உறுப்பினருக்கு பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை என்றும், அதை அரசு நிறைவேற்றும் என்றும் உறுதியளித்தார்.

அமைச்சர் கீதா ஜீவன், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக உள்ளதாகவும், பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகம் அமைதியான மாநிலமாக திகழ்வதாகவும் தெரிவித்தார். அமைச்சர் ரகுபதி, தமிழக மக்கள் பாதுகாப்புடன் வாழ்வதாக கூறினார்.

ராமாயணத்திலேயே…!

அமைச்சர் துரைமுருகன், உத்தரப் பிரதேசத்தில் 23 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை கற்பழித்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, "ராமாயணத்திலேயே பெண்ணை தூக்கி சென்றார்கள் அதனால் நல்லவர்கள் கெட்டவர்கள் எல்லா இடத்திலும் இருப்பார்கள் நடவடிக்கை என்ன என்பதை தான் நாம் பார்க்க வேண்டி இருக்கிறது." என்றார். மேலும் பிற மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை ஒப்பிட்டு, தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதாக துரைமுருகன் வாதிட்டார்.

இதற்கு பதிலளித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், எந்த குற்றச்சாட்டை நாங்கள் சொன்னாலும், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஏன் சொல்கிறீர்கள். தமிழ்நாட்டை வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட வேண்டும் என கூறினார்.

Kathiravan V

TwittereMail
கதிரவன் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக உள்ளார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடக துறைகளில் 2016ஆம் ஆண்டு முதல் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ளார். அரசியல், தொழில்முனைவு, வணிகம், ஆன்மீகம் மற்றும் நாட்டு நடப்பு உள்ளிட்ட பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறார். தூசி பாலிடெக்னிக் கல்லூரியில் DME பட்டயப்படிப்பு, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ அரசியல் அறிவியல், SRM பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முடித்து உள்ளார். புதிய தலைமுறை டி.வி., ஏபிபி நாடு ஆகிய முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணியாற்றி வருகிறார்.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.