மூன்று 3 மாதங்களில் 6,300 வழக்குகள் முடித்து வைப்பு - நீதிபதிகள் பாராட்டு
செப்டம்பர் முதல் நவம்பர் வரையில் கடந்த 3 மாதங்களில் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் 6,300 வழக்குகளை விசாரித்து முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மூன்று மாதங்களில் 6300 வழக்குகள் முடித்ததற்கு நீதிபதிகள் பாராட்டு
சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் கடந்த செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்தியநாராயணா பிரசாத் அமர்வு பொதுநல வழக்குகள், ஆக்கிரமிப்புகள், மேல் முறையீட்டு வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
கடந்த 3 மாதங்களில், 6,300 வழக்குகளை விசாரித்து முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்கங்கள், அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டுகளை நீதிபதிகள் தெரிவித்தனர்.
உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குகளை முடிப்பதற்கு வழக்கறிஞர்களின் செயல்பாடு பாராட்டுக்குரியது. என நீதிபதிகள் தெரிவித்தனர்.
டாபிக்ஸ்