MHC: சிவில் நீதிபதிகளின் தேர்வு பட்டியலை ரத்து செய்ய வேண்டும் - டிஎன்பிஎஸ்சிக்கு நீதிமன்றம் உத்தரவு
சிவில் நீதிபதிகளின் தேர்வு பட்டியலை ரத்து செய்யுமாறு டிஎன்பிஎஸ்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஜூன் 30ஆம் தேதியுடன் அவகாசம் முடிவடைந்தது.
இந்த தேர்வுக்காக 6 ஆயிரத்து 31 ஆண்களும், 6 ஆயிரத்து 5 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 12 ஆயிரத்து 37 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான முதல் நிலை தேர்வு, கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி நடந்து முடிந்தது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த நவம்பர் 4, 5ஆம் தேதிகளில் நடந்தது. இந்த தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தேர்வுக்கான அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக 472 பேர் அழைக்கப்பட்டனர். இதற்கான முடிவுகள் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது.
