Coimbatore: ‘பொன்முடியை எங்கு பார்த்தாலும் விடக்கூடாது..’ தலைமை ஜீயர் கோவையில் உத்தரவு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Coimbatore: ‘பொன்முடியை எங்கு பார்த்தாலும் விடக்கூடாது..’ தலைமை ஜீயர் கோவையில் உத்தரவு!

Coimbatore: ‘பொன்முடியை எங்கு பார்த்தாலும் விடக்கூடாது..’ தலைமை ஜீயர் கோவையில் உத்தரவு!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Apr 13, 2025 03:54 PM IST

Coimbatore: ‘திராவிட மாடல் கட்சியில், பொன்முடியை ப்ரைம் மினிஸ்டர் பதவியில் இருந்தா நீக்குனாங்க? அது கட்சி பதவி, அது ஒரு பதவியா? தமிழக அரசுக்கு தைரியம் இருந்தால் பொன்முடியை கைது செய்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்’

Coimbatore: ‘பொன்முடியை எங்கு பார்த்தாலும் விடக்கூடாது..’ தலைமை ஜீயர் கோவையில் உத்தரவு!
Coimbatore: ‘பொன்முடியை எங்கு பார்த்தாலும் விடக்கூடாது..’ தலைமை ஜீயர் கோவையில் உத்தரவு!

கோவையில் மன்னார்குடி தலைமை ஜீயர் ஸ்ரீ செண்டலங்கார செண்பகம் மன்னார் சம்பத்குமார் ராமானு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

‘‘அமைச்சர் பொன்முடி கேவலமாக பேசக்கூடியவர். இன்னும் அவர் அமைச்சர் பதவியில் இருக்கிறார். அவரை அமைச்சர் பதவியில் இருந்த் நீக்கி கைது செய்ய வேண்டும். இந்து தர்மத்தை கேவலமாக பேசக்கூடியவர்கள் அமைச்சர்களாக உள்ளனர்.

திராவிட மாடல் கட்சியில், பொன்முடியை ப்ரைம் மினிஸ்டர் பதவியில் இருந்தா நீக்குனாங்க? அது கட்சி பதவி, அது ஒரு பதவியா? தமிழக அரசுக்கு தைரியம் இருந்தால் பொன்முடியை கைது செய்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். முதல்வருக்கு தைரியம் இருந்தால் அவரை கைது செய்ய வேண்டும்.

பெண்களை ஓசி என கேவலாக பேசினார். இப்போது சைவம், வைணவம் குறித்து அவதூறாக பேசியுள்ளார். இந்துக்களுக்கு தைரியம் இருந்தால், தைரியம் உள்ள இந்துக்கள் சூடு சொரணை இருந்தால், அந்த அமைச்சர் எங்கிருந்தாலும் விடக்கூடாது. தொடர்ந்து இந்துக்களுக்கு துரோகம் இல்லாத கூட்டணி அமைய வேண்டும்.

லூட்டி அடிக்க கூடிய, கொள்ளை அடிக்க கூடிய துறை இருக்கு என்றால் அது இந்து சமய அறநிலையத்துறைதான். இந்து விரோத துரோகிகள் கோயில் கோவிலாக அழைகிறார்கள். குடமுழுக்கு தமிழில் மேற்கொள்ள யாரும் இங்கு விரோதம் இல்லை. துணை முதல்வர் உதயநிதி சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார். ஆனால் அவரது அம்மா கோயில் கோயிலாக பந்தவஸ்துடன் சாமிதரிசனம் செய்து வருகிறார், இது நாடகம்.

சனாதனத்தை எதிர்ப்பவர்கள் அப்பாவையே மாற்றுவார்கள். மேலும் மசூதி, சர்ச் முன்பாக அம்மதத்தின் தர்மத்தை விமர்சிக்க முடியுமா? இந்துக்கள் குறித்து தொடர்ந்து அவதூறு கருத்தை பதவியியில் இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்,’’ என்று கடும் வார்த்தைகளால் சாடினார்.

Stalin Navaneethakrishnan

TwittereMail
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் எடிட்டராக பணியாற்றி வருகிறார். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், தேசம், சர்வதேசம், பொழுதுபோக்கு, ஜோதிடம், ஆன்மிகம், விளையாட்டு, வியாபாரம், லைப்ஸ்டைல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் செய்திகளை எழுதுவதுடன், இணையதளத்தையும் வழிநடத்தி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பிபிஏ முடித்துள்ள இவர், தினபூமி, தினமலர், நியூஸ் 18, ஏபிபி நாடு ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.