’சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுதலை செய்த உத்தரவு ரத்து!’ உயர்நீதிமன்றம் அதிரடி!
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகனை விடுதலை செய்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது.

’சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுதலை செய்த உத்தரவு ரத்து!’ உயர்நீதிமன்றம் அதிரடி!
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகனை விடுதலை செய்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது. மேலும் துரைமுருகன் மீதான வழக்கை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கு
1996 முதல் 2001 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், வருமானத்திற்கு அதிகமாக 3 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு துறை 2002-ல் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் சகோதரர் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்டது. 2007-ல் வேலூர் நீதிமன்றம் இவர்கள் அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.