’நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை!’ சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
”மின்தடை காரணமாக கவனச்சிதறல் ஏற்பட்டதால் திறமையாக தேர்வு எழுத முடியவில்லை என்றும், கூடுதல் நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டது”

’நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை!’ சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மின்தடை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தக் கோரிய வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மின்தடையால் மாணவர்கள் பாதிப்பு
கடந்த மே 4, 2025 அன்று நாடு முழுவதும் நடைபெற்ற இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வில், ஆவடி கேந்திர வித்யாலய பள்ளியில் 464 மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு பிற்பகல் 2:00 மணிக்குத் தொடங்கிய நிலையில், கனமழை காரணமாக 3:00 முதல் 4:15 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை. மேலும், தேர்வு மையத்தில் மழைநீர் புகுந்ததால், மாற்று இடத்தில் தேர்வு எழுத அறிவுறுத்தப்பட்டதாகவும், இது கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
