Kodanadu Case : கொடநாடு வழக்கு.. கனகராஜ்க்கு 7 முறை வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு.. விசாரணையை ஒத்தி வைத்த நீதிபதி!
Kodanadu Case: கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் இறப்பதற்கு முன்பு வெளிநாட்டில் இருந்து 7 முறை அழைப்பு வந்ததை இன்டர்போல் காவல்துறை உதவியுடன் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருவதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடநாடு வழக்கு.. கனகராஜ்க்கு 7 முறை வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு.. விசாரணையை ஒத்தி வைத்த நீதிபதி!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி ஆவணங்கள் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டதுடன் அங்கு காவலாளியாக இருந்த ஓம்பகதூர் என்பவரும் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கில் சயான், மனோஜ், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின் மனோஜ்சாமி, ஜித்தின்ஜாய், உதயகுமார், சந்தோஷ்சாமி ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு
கொடநாடு வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர்.