அத்தி வரதர் திருத்தேர்: ’காஞ்சிபுரத்தை அதிரவிட்ட அத்தி வரதர் கோயில் தேரோட்டம்!’ விண்ணை பிளந்த கோவிந்தா கோஷம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  அத்தி வரதர் திருத்தேர்: ’காஞ்சிபுரத்தை அதிரவிட்ட அத்தி வரதர் கோயில் தேரோட்டம்!’ விண்ணை பிளந்த கோவிந்தா கோஷம்!

அத்தி வரதர் திருத்தேர்: ’காஞ்சிபுரத்தை அதிரவிட்ட அத்தி வரதர் கோயில் தேரோட்டம்!’ விண்ணை பிளந்த கோவிந்தா கோஷம்!

Kathiravan V HT Tamil
Published May 17, 2025 10:00 AM IST

காந்தி சாலையில் உள்ள தேரடியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்ட திருத்தேர் ஆனது, மூங்கில் மண்டபம், பேருந்து நிலையம், இரட்டை மண்டபம், கச்சபேஸ்வரர் கோயில், கங்கை கொண்டான் மண்டபம் ஆகிய பகுதிகளை தாண்டி சென்று கொண்டு இருக்கின்றது.

அத்தி வரதர் திருத்தேர்: ’காஞ்சிபுரத்தை அதிரவிட்ட அத்தி வரதர் கோயில் தேரோட்டம்!’ விண்ணை பிளந்த கோவிந்தா கோஷம்!
அத்தி வரதர் திருத்தேர்: ’காஞ்சிபுரத்தை அதிரவிட்ட அத்தி வரதர் கோயில் தேரோட்டம்!’ விண்ணை பிளந்த கோவிந்தா கோஷம்!

திருவிழாவின் பின்னணி

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி பிரம்மோற்சவம், 10 நாள் திருவிழாவாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த ஆறு நாட்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்று வந்தது. ஏழாம் நாளான இன்று 72 அடி உயரமுள்ள, ஏழு அடுக்குகள் கொண்ட பிரம்மாண்ட திருத்தேர் உற்சவம் நடைபெற்று வருகிறது.

காந்தி சாலையில் உள்ள தேரடியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்ட திருத்தேர் ஆனது, மூங்கில் மண்டபம், பேருந்து நிலையம், இரட்டை மண்டபம், கச்சபேஸ்வரர் கோயில், கங்கை கொண்டான் மண்டபம் ஆகிய பகுதிகளை தாண்டி சென்று கொண்டு இருக்கின்றது. 

திருத்தேர் உற்சவத்தின் சிறப்பு

அதிகாலை பூஜைகளுடன் தொடங்கிய இந்த உற்சவத்தில், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் வரதராஜ பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். தேர் பவனியில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா, வரதா, அருதா’ என கோஷங்களை எழுப்பி, தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரில் அமைந்துள்ள கலைநயமிக்க சிலைகள் பக்தர்களை கவர்ந்தன.

பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள்

இந்த பிரம்மோற்சவத்திற்கு மூன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் இருக்க, காஞ்சிபுரம் மாநகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. செவிலிமேடு, ஓரிக்கை, ஒலிமுகமதுப்பேட்டை, மற்றும் பழைய ரயில்வே நிலைய சாலை ஆகிய இடங்களில் நான்கு தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, பக்தர்கள் நடந்து சென்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருத்தேர் பயண பாதை

திருத்தேர் பவனி காந்தி சாலை, மூங்கில் மண்டபம், பேருந்து நிலையம், மற்றும் நான்கு ராஜ வீதிகள் வழியாகச் சென்று, மதியம் ஒரு மணியளவில் மீண்டும் கோவில் திடலை அடையும். வழிநெடுகிலும் பக்தர்கள் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

பக்தர்களின் ஆரவாரம்

திருத்தேர் காந்தி சாலையை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், பக்தர்களின் ‘கோவிந்தா’ கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. இந்த பிரம்மாண்ட உற்சவத்தைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் குவிந்துள்ளனர்.