Kallakurichi : கள்ளக்குறிச்சி மரணம்.. ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மனு அளித்த அதிமுகவினர்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kallakurichi : கள்ளக்குறிச்சி மரணம்.. ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மனு அளித்த அதிமுகவினர்!

Kallakurichi : கள்ளக்குறிச்சி மரணம்.. ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மனு அளித்த அதிமுகவினர்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 25, 2024 12:24 PM IST

Kallakurichi : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 59 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையல் கள்ளச்சாராய மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சிபிஐ விசாரணை வேண்டும் என ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மரணம்.. ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மனு அளித்த அதிமுகவினர்!
கள்ளக்குறிச்சி மரணம்.. ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மனு அளித்த அதிமுகவினர்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 59 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையல் கள்ளச்சாராய மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி   சிபிஐ விசாரணை வேண்டும் என ஆளுநரிடம் இன்று மனு அளித்துள்ளார்.

கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் 61 பேரும் எம்பிக்கள் 3 பேர் என அனைவரும் ஒன்றாக கவர்னர் சந்தித்தனர்.

கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக நேற்று அண்ணாமலை கவர்னரை சந்தித்து மனு அளித்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண ஓலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் ஜூன் 18ஆம் தேதி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து பலர் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், பாண்டிச்சேரி ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரங்களில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 10 லட்சமும், சிகிச்சை பெறும் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரமும் நிவாரணமாக அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது.

கைது

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து கண்ணுக்குட்டி என்கிற கோவிந்த ராஜ், தாமோதரன், கோவிந்தராஜ் மனைவி விஜயாவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளச்சாராயம் விற்பனைக்கு மெத்தனால் விற்பனை செய்த சின்னதுரை என்பவரும் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய புகாரில் குற்றப்பின்னணி உடையவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி கைது செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

விசாரணை அதிகாரி நியமனம்

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. கோமதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒருநபர் விசாரணை ஆணையம் அமைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, இது நிகழ்ந்ததற்கான அனைத்துக் காரணிகளைக் கண்டறியவும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிடவும், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.பி.கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஒருநபர் ஆணையம் இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது மாதங்களுக்குள் வழங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

சிபிஐ விசாரணை கோரும் எதிர்க்கட்சிகள்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.