மாற்றுத்திறனாளி வழக்கறிஞர்களுக்கு முன்னுரிமை - நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் கருத்து
ஸ்ரீவில்லிபுத்தூர் கிழமை நீதிமன்றத்தில் வருங்காலங்களில் வழக்கறிஞர்கள் ஆணையம் நியமிக்க கூடிய வழக்குகளில் மாற்றுத்திறனாளி வழக்கறிஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மல்லி கிராமத்தில் உள்ள சர்வே எண்: 16746 நிலத்தை ஆய்வு செய்யக்கோரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி மாலதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று காளீஸ்வரி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்து இந்த நீதிமன்றம் சட்டத்துக்கு உட்பட்டு அனைத்து தரப்பினருக்கும் உரிய நோட்டீஸ் அனுப்பப்பட்டு சர்வே எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு இருக்கும் பட்சத்தில் கீழமை நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடரவும் அறிவுறுத்தப்பட்டது.
இது தொடர்பாக ஏற்கனவே ஸ்ரீவில்லிபுத்தூர் கீழமை நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணையில் நிலங்களை ஆய்வு செய்வதற்கு வழக்கறிஞர் ஆணையம் நியமிக்கப்பட்டு உத்தரவிட்ப்பட்டுள்ளது.