கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்!
”ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்த பூங்குன்றன், அவரது மறைவுக்குப் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கி, தஞ்சாவூர் அருளானந்த நகரில் உறவினர் வீட்டில் தங்கி விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்”

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்!
கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானார்.
முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது. இவ்வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளரான பூங்குன்றன் இன்று கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். இந்த வழக்கில் 250-க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், பூங்குன்றனின் ஆஜர் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.