தவெக பரிதாபங்கள்: விஜய்யை சந்திக்க முடியாமல் தவிக்கும் ஆதவ் அர்ஜூனா! வெங்கடரமணனை வெளியேற்றும் மூவரணி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தவெக பரிதாபங்கள்: விஜய்யை சந்திக்க முடியாமல் தவிக்கும் ஆதவ் அர்ஜூனா! வெங்கடரமணனை வெளியேற்றும் மூவரணி!

தவெக பரிதாபங்கள்: விஜய்யை சந்திக்க முடியாமல் தவிக்கும் ஆதவ் அர்ஜூனா! வெங்கடரமணனை வெளியேற்றும் மூவரணி!

HT Tamil HT Tamil Published May 23, 2025 06:13 PM IST
HT Tamil HT Tamil
Published May 23, 2025 06:13 PM IST

”பூத் கமிட்டி கூட்டம் மற்றும் மாநாட்டு பணிகளை ஒருங்கிணைப்பதில், தவெக தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளதாக பனையூர் பட்சிகள் பேசிக் கொள்கின்றன”

தவெக பரிதாபங்கள்: விஜய்யை சந்திக்க முடியாமல் தவிக்கும் ஆதவ் அர்ஜூனா! வெங்கடரமணனை வெளியேற்றும் மூவரணி!
தவெக பரிதாபங்கள்: விஜய்யை சந்திக்க முடியாமல் தவிக்கும் ஆதவ் அர்ஜூனா! வெங்கடரமணனை வெளியேற்றும் மூவரணி!

விஜய்யின் ஜனநாயகன் படப்பிடிப்பு மற்றும் கட்சிப் பணிகள்

தவெக தலைவர் விஜய், தனது "ஜனநாயகன்" படப்பிடிப்பு பணிகளை 95% முடித்துவிட்டு, இம்மாதம் முதல் முழுமையாக கட்சிப் பணிகளில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக, தவெகவில் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ள 6 மாவட்டங்களுக்கு செயலாளர்களை அறிவிக்க உள்ளார். பின்னர், தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவை நடத்த உள்ளார். இதனைத் தொடர்ந்து, கடலூரில் வடக்கு மண்டல பூத் கமிட்டி கருத்தரங்கக் கூட்டத்தையும், ஜூலை இரண்டாவது வாரத்தில் திருச்சியில் இரண்டாவது மாநில மாநாட்டையும் நடத்துவதே விஜயின் தற்போதைய ப்ளான்.

கட்சியில் உட்கட்சி மோதல்: ஆதவ் அர்ஜுனா மற்றும் ஜான் ஆரோக்கியசாமி

பூத் கமிட்டி கூட்டம் மற்றும் மாநாட்டு பணிகளை ஒருங்கிணைப்பதில், தவெக தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளதாக பனையூர் பட்சிகள் பேசிக் கொள்கின்றன. இதன் காரணமாக, ஆதவ் அர்ஜுனாவுக்கு மாநாட்டு பணிகள் தொடர்பாக விஜய்யை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கட்சியின் முக்கிய மூவரணியான புஸ்ஸி ஆனந்த், ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர், விஜய்யை யாரும் நேரடியாக சந்திக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்களாம்.

வெங்கடரமணன் மீது சதி

புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான மூவரணி, கட்சியின் பொருளாளராகவும், விஜய்யின் நம்பிக்கைக்குரியவராகவும் இருக்கும் வெங்கடரமணனை கட்சியை விட்டு நீக்க சதித்திட்டம் தீட்டியுள்ளது. வெங்கடரமணன் ஒரு பிராமணராக இருப்பதால், அவரை RSS ஆதரவாளர் மற்றும் "சங்கி" என்று விஜய்யிடம் சித்தரித்து, "கறுப்பு ஆடு" என விமர்சித்து வருகின்றனர். இதற்காக மூவரணி, விஜய்யை தொடர்ந்து மூளைச்சலவை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெக WAR Room சிக்கல்

தவெகவின் சமூக ஊடக பணிகளை மேற்கொள்ளும் ’Simple Sense’ என்ற நிறுவனம், பிரஷாந்த் கிஷோரால் உருவாக்கப்பட்டு, சென்னை கிண்டியில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் சுமார் 50 பேர் பணியாற்றினர், அவர்களின் ஊதியத்தை ஆதவ் அர்ஜுனா வழங்குவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பிரஷாந்த் கிஷோருடன் ஏற்பட்ட கருத்து மோதலால், ஆதவ் அர்ஜுனா 40 பேரை பணி நீக்கம் செய்துள்ளார். மீதமுள்ள 10 பேரை, தேனாம்பேட்டையில் உள்ள பிரஸ்டீஜ் கட்டிடத்தில் தொடங்கப்படவுள்ள TVK WAR Room-ல் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், தங்களுக்கும் TVK WAR Room-ல் வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, இல்லையெனில் நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். அரசியல் கட்சி ஆரம்பித்து தவெகவினர் ஆளுங்கட்சியினர் முகாம்களை முற்றுகையிடுவார்கள் என பேசப்படும் நிலையில், விஜய்யின் வீட்டையே முற்றுகையிடம் நிலைக்கு கட்சியின் செயல்பாடுகள் உள்ளதாக பேசிக் கொள்கின்றனர்.