SDPI : மன்னிப்புக் கேட்க வேண்டும்.. கீழ்த்தரமான நிலைக்குப் பிரதமர் இறங்கியிருப்பது நாட்டிற்கு அவமானம் - நெல்லை முபாரக்!
SDPI About PM Modi : இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டி பிரச்சாரம் செய்துவந்த பிரதமர் மோடி, தற்போது தமிழர்களுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்தும், தமிழர்களைத் திருடர்கள் என்கிற ரீதியிலும் பிரச்சாரம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

முஸ்லிம்களைத் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராகப் பிரதமர் மோடி அவதூறு வெறுப்புப் பிரச்சாரம் செய்து வருவதாக எஸ்டிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
வெறுக்கத்தக்க பேச்சுகள் மூலம் மத-இன ரீதியான வெறுப்பைத் தூண்டிவிடும் கீழ்த்தரமான நிலைக்குப் பிரதமர் இறங்கியிருப்பது நாட்டிற்கு அவமானம் எனவும் தெரிவித்துள்ளனர்.
தமிழர்களுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம்
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமருக்குப் பொருந்தாத வெறுப்பு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார் பிரதமர் மோடி. 10 ஆண்டுக்கால ஆட்சியின் தோல்வியை மக்களிடமிருந்து மறைக்கவும், தேர்தல் தோல்வி பயத்திலும், இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டி பிரச்சாரம் செய்துவந்த பிரதமர் மோடி, தற்போது தமிழர்களுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்தும், தமிழர்களைத் திருடர்கள் என்கிற ரீதியிலும் பிரச்சாரம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
