தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Is The Ops Jallikattu Hero Who Ordered The Baton At Marina? - Former Aiadmk Minister Jayakumar Question

Jayakumar: மெரினாவில் தடியடி நடத்திய ஓபிஎஸ் ஜல்லிக்கட்டு நாயகனா? ஜெயக்குமார் கேள்வி

Kathiravan V HT Tamil
May 18, 2023 03:21 PM IST

காவல்துறையை ஏவிவிட்டு மக்கள் மீதும், மீனவர்கள் மீதும் தடியடி நடத்தி நடத்த போலீசுக்கு உத்தரவிட்டவர் ஓபிஎஸ். இவரா ஜல்லிக்கட்டு நாயகன்?

செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ட்ரெண்டிங் செய்திகள்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக எடுத்த தொடர் சட்ட நடவடிக்கை காரணமாகத்தான் நமது பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்யக்கூடாது என்று குரல் கொடுத்து சட்டநடவடிக்கை மூலம் நிலை நிறுத்தியது.

ஜல்லிக்காட்டு நாயகன் எனும் தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் ஓபிஎஸ், தனது மனசாட்சியை தொட்டுக்கேட்கட்டும். தமிழர்கள் மெரினா கடற்கரையை ஸ்தம்பிக்க செய்து பலநாட்களாக போராடினார்கள். இப்படி பட்ட உணர்வு மிக்க போராட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று சொல்லி அரசின் சார்பில் கோரிக்கை ஆணை அனுப்பி அதன் அடிப்படையில் சட்டப்பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

அன்றைக்கு ஜனவரி 26ஆம் தேதி குடியரசுத் தினத்தன்று மெடல் கொடுக்க வேண்டும் ஓபிஎஸ்க்கு கொள்ளை ஆசை, அதற்காக போரட்டத்தை ஒடுக்க வேண்டும் என்பதற்காக காவல்துறையை ஏவிவிட்டு மக்கள் மீதும், மீனவர்கள் மீதும் தடியடி நடத்தி நடத்த போலீசுக்கு உத்தரவிட்டவர் ஓபிஎஸ். இவரா ஜல்லிக்கட்டு நாயகன்?

அம்மாவின் அரசு எடப்பாடியார் தலைமையில் வந்த பிறகு அதற்கு நிவாரணம் அளித்து, சட்டப்போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தனக்கு தானே ஜல்லிக்கட்டு நாயகன் என்று சொல்லி தன்னை விளம்பரப்படுத்துவதே ஓபிஎஸின் வேலை.

தமிழ்நாட்டு மக்கள் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்க்குலைவு, ஆட்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, கள்ளச்சாராயம் உள்ளிட்டவை நிகழ்ந்து வருகிறது. முன்பெல்லாம் பைக்கில் செயின் அறுத்தவர்கள் இப்போது காரில் ஜெயின் அறுக்க தொடங்கி உள்ளார்கள். இந்தியாவிலேயே மிகமிக மோசமான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்