‘அண்ணாமலை வந்த பிறகு தான் பாஜக.. காங்கிரஸூக்கு எதிர்காலம் இல்லை’ கார்த்தி சிதம்பரம் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘அண்ணாமலை வந்த பிறகு தான் பாஜக.. காங்கிரஸூக்கு எதிர்காலம் இல்லை’ கார்த்தி சிதம்பரம் பேட்டி!

‘அண்ணாமலை வந்த பிறகு தான் பாஜக.. காங்கிரஸூக்கு எதிர்காலம் இல்லை’ கார்த்தி சிதம்பரம் பேட்டி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Apr 03, 2025 12:24 PM IST

‘பிடிக்கிறதோ, பிடிக்கலையோ, கொள்கை ரீதியாக முரண்பட்டாலும் அண்ணாமலை வந்த பிறகு தான், பாஜகவை இங்கு கவனிக்க ஆரம்பித்தார்கள். தமிழிசை இருந்த போதோ, பொன் ராதாகிருஷ்ணன் இருந்த போதோ, சிபி ராதாகிருஷ்ணன் இருந்த போதோ, அந்த கட்சி பெரிதாக மக்கள் கவனிக்கவில்லை’

‘அண்ணாமலை வந்த பிறகு தான் பாஜக.. காங்கிரஸூக்கு எதிர்காலம் இல்லை’ கார்த்தி சிதம்பரம் பேட்டி!
‘அண்ணாமலை வந்த பிறகு தான் பாஜக.. காங்கிரஸூக்கு எதிர்காலம் இல்லை’ கார்த்தி சிதம்பரம் பேட்டி!

காங்கிரஸ் கட்சி ஓட்டு கீழே போயிருக்கும்

‘‘நான் தமிழக காங்கிரஸ் தலைவராக ஆக வேண்டும் என்பதை விட, காங்கிரஸ் தமிழகத்தில் வலுவான கட்சியாக இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. இன்றைய சூழலில், நடைமுறையாக, எதார்த்தமாக, மிகைப்படுத்தாமல், நேர்மையாக கூற வேண்டுமானால் 5 அல்லது 6வது இடத்தில் தான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. 2014க்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் ஓட்டு என்ன என்பதை சோதனை செய்யவே இல்லை. அந்த அளவிற்கு தான் இருக்கும், அல்லது அதற்கு கீழ் தான் ஓட்டு போயிருக்கும். மற்றபடி பெரிதாக வளர்ந்திருக்காது.

கூட்டணியை நம்பி தான் ஜெயிக்கிறோம்

இந்த மாதிரி சூழலில் கட்சி இருப்பது, கட்சிக்கு பெரிய எதிர்காலம் தராது. கூட்டணியை நம்பி நம்பி தான் ஜெயித்துக் கொண்டிருக்கிறோம். அந்த நிலை மாற வேண்டும் என்பது தான், என் ஆசை. அதை நான் தான் பண்ண வேண்டும் என்று கிடையாது, மற்றவர்கள் யாராவது பண்ணலாம். மற்ற யாரும் பண்ணுவதற்கு எந்த முயற்சியும், எண்ணமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

என்னிடம் கட்சியை தருவார்கள் என்கிற நம்பிக்கை, நாளுக்கு நாள் எனக்கு குறைந்து வருகிறது. நான் சுயமாக யோசிப்பவன், இவர்கள் நினைப்பது போல சமரசமாக நான் யோசிக்க மாட்டேன். பொட்டிக்குள் நான் அடங்கியிருக்க மாட்டேன். ஆனால், தமிழ்நாடு அரசியலை பார்த்தீர்கள் என்றால், தனித்து செயல்படும் போது தான் கட்சிகள் வளர்கின்றன. உதாரணமாக புதிதாக விஜய் வந்திருக்கார், அவருக்கு ரசிகர்கள் இருந்தாலும், கொஞ்சம் டிராமட்டிக்கா பேசுவதால் தான் கட்சி பேசப்படுது.

அண்ணாமலை வந்த பிறகு தான் பாஜக..

அதே மாதிரி தான் சீமானுக்கும்.. பிடிக்கிறதோ, பிடிக்கலையோ, கொள்கை ரீதியாக முரண்பட்டாலும் அண்ணாமலை வந்த பிறகு தான், பாஜகவை இங்கு கவனிக்க ஆரம்பித்தார்கள். தமிழிசை இருந்த போதோ, பொன் ராதாகிருஷ்ணன் இருந்த போதோ, சிபி ராதாகிருஷ்ணன் இருந்த போதோ, அந்த கட்சி பெரிதாக மக்கள் கவனிக்கவில்லை. புத்துணர்ச்சியாக, நன்கு பேசக்கூடிய தலைவர்கள் தமிழக காங்கிரஸில் இல்லை. எதார்த்தமாக இருந்தால், இன்னும் ப்ளஸ் ஆக இருக்கும், அப்படி ஒன்றை சமீபத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கொடுக்கவில்லை.

காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் சவாலானது

கூட்டணி கட்சியை நம்பி இருந்தாலும், தனித்துவத்தை காட்ட யாரும் முன்வரவில்லை. நான் இருந்தால், அதை காட்ட முடியும் என்று நம்புகிறேன். ஆனால் இன்று இருக்கக் கூடிய கட்சியின் சூழலில், எனக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை. எனக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பு தருவார்கள் என்கிற எதிர்பார்ப்பு என்னிடம் இல்லை.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் பயங்கர சவாலாக இருக்கும். களம் இன்னும் கூட்டமாகிக் கொண்டிருக்கிறது’’ என்று அந்த பேட்டியில் கார்த்தி சிதம்பரம் பேசியுள்ளார்.