Tamil News  /  Tamilnadu  /  Interview With Minister Senthil Balaji About Income Tax Raid
மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு
மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு

Karur IT Raid: ’2006க்கு பிறகு ஒரு சதுரடி நிலம் கூட வாங்கவில்லை’ ரெய்டு குறித்து செந்தில் பாலாஜி பேட்டி

26 May 2023, 13:56 ISTKathiravan V
26 May 2023, 13:56 IST

"நான் நினைத்துப்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய இடத்தை கொடுத்துள்ளார் முதல்வர். எனது வாழ்நாள் முழுக்க அவருக்கு நன்றி உணர்வோடு பணியாற்றுவேன். அவருக்கு நன்றி"

வருமானவரி சோதனை குறித்து மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த சோதனை என்பதை புதியதாக நாங்கள் எதிர்கொள்ளவில்லை. கடந்த தேர்தலின் போது நாங்கள் இந்த சோதனையை எதிர்க்கொண்டோம். வருமானவரித்துறை சோதனை சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவும் நடைபெற்றது.

தற்போது எனது இல்லத்தில் நடக்கவில்லை, எனது சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் இல்லங்களில் சோதனை நடந்து வருகிறது.

விரும்பத்தகாத சம்பவங்கள் நடத்ததையடுத்து கரூருக்கு தொடர்பு கொண்டு நிர்வாக பெருமக்கள் யாரும் சோதனை நடக்கும் இடங்களில் இருக்க கூடாது.முழு ஒத்துழைப்பை சோதனை நடத்துபவர்களுக்கு வழங்கிட வேண்டும் என்று சொன்னேன். அவர்கள் அனைவரும் கலைந்து சென்றுள்ளார்கள். வருமானவரித்துறை எவ்வுளவு நாட்கள் சோதனை நடத்தினாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.

முழு சோதனை நடந்து முடிந்த பிறகு நான் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளேன்.

வருமானவரி சோதனைக்கு அதிகாலையில் சென்றவர்கள் பெல் அடித்துவிட்டு சிறிது நேரம் காத்திருக்காமல் கேட்டில் இருந்து ஏறி குத்தித்த வீடியோவை எனக்கு அனுப்பி உள்ளார்கள்.

சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். எங்களுக்கு தொடர்பு இல்லாதவர்கள் இல்லத்திலும் அவர்கள் சென்றிருக்கிறார்கள்.

எனக்கு தெரிந்தவரை 40க்கும் மேற்பட்ட பகுதிகளில் சோதனை நடப்பதாக சொல்லி உள்ளார்கள்.

வருமானவரித்துறை சோதனையை நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரே போனில் அனைவரையும் விலகி போக சொல்லிவிட்டேன். நீங்கள் சொல்லும் கட்சி வருமானவரி சோதனையின் போது சாப்பாடு போட்டு சாமியான பந்தல் போட்டு

1996ஆம் ஆண்டு சுயேட்சையாக ஒன்றியக்குழு உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அன்று தொடங்கி இன்று வரை 26 ஆண்டுகள் பொது வாழ்வில் கரூர் மக்கள் வெற்றி பெற செய்து மக்கள் பணியாற்றும் வாய்ப்பை மக்கள் வழங்கி உள்ளார்கள்.

அரவக்குறிச்சி, கரூரில் தேர்தல் பரப்புரை செய்து வெற்றி பெற செய்து அமைச்சராக பணியாற்றும் வாய்ப்பை முதல்வர் வழங்கி உள்ளார்கள். மிகப்பெரிய அங்கீகாரத்தை முதல்வர் எனக்கு வழங்கி உள்ளர்கள்.

வருமானவரி ஏய்ப்பு யாராக செய்திருந்தால் தாராளமாக நடவடிக்கை எடுத்துக் கொள்ளட்டும்.

2006 சட்டமன்ற தேர்தலில் நான் வேட்புமனுவில் என்ன தாக்கல் செய்தேனோ அதில் இருந்து ஒரு சொத்தை மட்டுமே நான் விற்பனை செய்துள்ளேன். 2006 தொடங்கி ஒரு சதுரடி நிலம் கூட நானோ, எனது சகோதரனோ, எங்களது தாயோ, தந்தையோ வாங்கவில்லை. இனி வாங்கவும் மாட்டோம். இருக்கும் சொத்துக்களே எங்களுக்கு போதுமானது.

நான் வீடுகட்டுவதாக சொல்லும் இடம் எனது தம்பி மனைவியின் தாயார் தங்களது மகள்களுக்கு தங்கள் சொத்துக்களை தானமாக கொடுத்துள்ளார்கள். அந்த இடம்தான் வீடுகட்டுவதாக சொல்லும் இடம்.

நான் நினைத்துப்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய இடத்தை கொடுத்துள்ளார் முதல்வர். எனது வாழ்நாள் முழுக்க அவருக்கு நன்றி உணர்வோடு பணியாற்றுவேன். அவருக்கு நன்றி.

டாபிக்ஸ்