தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! உங்க மாவட்டம் இருக்கா?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! உங்க மாவட்டம் இருக்கா?

தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! உங்க மாவட்டம் இருக்கா?

Suguna Devi P HT Tamil
Published Apr 25, 2025 09:35 AM IST

இந்தியாவில் கோடை வெப்பம் புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில் இன்று (25/04/2025) தமிழ்நாட்டில் மட்டும் 7 மாவட்டங்களில் தொடர்ந்து 3 மணி நேரம் மழை பெய்ய உள்ளது. இந்த அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியீட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! உங்க மாவட்டம் இருக்கா?
தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! உங்க மாவட்டம் இருக்கா?

கடுமையான வெயில்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்தியாவில் கோடைகாலம் நிலவும். அதிலும் இந்தியா மிதவெப்ப நாடு என்பதனால் கோடை வெயிலின் தாக்கம் இங்கு அதிகமாகவே இருக்கும். ஆனால் இந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. மார்ச் மாதத்திலேயே காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் ஏப்ரல் மாதத்திலேயே அதிகமான வெப்ப அலை வீசி வருகிறது.

இந்த மாத தொடக்கத்தில் மழை எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் சரியான பெரிய அளவில் மழைப்பொழிவு இல்லை. வங்க கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் குறைவான மழை இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று முதல் இந்தியாவின் பல பகுதிகளில் அதிகமான வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. மேற்கு மத்திய பிரதேசத்தில் 30ஆம் தேதி வரையும், கிழக்கு மத்திய பிரதேச பகுதிகளில் 27 ஆம் தேதி வரை உத்தரபிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை இருக்கும் என கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் மழை

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட 7 மாவட்டங்களில் மட்டும் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், " தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டின் திருப்பூர், தேனி, திருநெல்வேலி, கோவை, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் பரவலாக மழை இருக்கும் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.

Suguna Devi P

TwittereMail
சுகுணா தேவி பி, கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு ஊடகம், மொழிபெயர்ப்பு துறை மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தேசம், லைப்ஸ்டைல் சர்வதேசம், சினிமா உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் ஆங்கில இலக்கியத் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர், விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் 2018-2019 ஆம் ஆண்டு பணியாற்றியுள்ளார். மேலும் ஈடிவி பாரத் தமிழ், தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான இதழ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.