சென்னையில் நடிகர் ஆர்யா வீட்டில் வருமானவரி ரெய்டு! ஆறுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சென்னையில் நடிகர் ஆர்யா வீட்டில் வருமானவரி ரெய்டு! ஆறுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை!

சென்னையில் நடிகர் ஆர்யா வீட்டில் வருமானவரி ரெய்டு! ஆறுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை!

Kathiravan V HT Tamil
Published Jun 18, 2025 10:11 AM IST

”நடிகர் ஆர்யாவின் குடும்பத்தினர் அண்ணாநகர் பகுதியில் உள்ள சீசெல் உணவக கிளையை நடத்தி வருவதாகவும், இதன் அடிப்படையில் ஆர்யாவின் வீட்டில் சோதனை நடத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன”

சென்னையில் நடிகர் ஆர்யா வீட்டில் வருமானவரி ரெய்டு! ஆறுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை!
சென்னையில் நடிகர் ஆர்யா வீட்டில் வருமானவரி ரெய்டு! ஆறுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் ஆர்யாவின் வீட்டில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல உணவகச் சங்கிலியான சீசெல் உணவகங்களுடன் தொடர்புடையதாக இந்த சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் ஆழ்வார்பேட்டை, வேளச்சேரி, காண்டாஞ்சாவடி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் உள்ள சீசெல் கிளைகளிலும் வருமானவரி துறை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

சோதனையின் பின்னணி

நடிகர் ஆர்யாவின் குடும்பத்தினர் அண்ணாநகர் பகுதியில் உள்ள சீசெல் உணவக கிளையை நடத்தி வருவதாகவும், இதன் அடிப்படையில் ஆர்யாவின் வீட்டில் சோதனை நடத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரளா வருமானவரி துறையின் கோரிக்கையின் பேரில், சென்னை வருமானவரி துறை அதிகாரிகள் ஆர்யாவின் ஆழ்வார்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆறு அதிகாரிகள், போலீஸ் உதவியுடன் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

சோதனையின் நோக்கம்

கணக்கு வழக்குகள் தொடர்பாக ஆர்யாவிடம் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் சீசெல் உணவகக் கிளைகள் செயல்பட்டு வருவதால், இந்த சோதனைகள் அனைத்து கிளைகளிலும் ஒரே நேரத்தில் நடைபெறுவதாக தகவல்கள் கூறுகின்றன. வரி ஏய்ப்பு சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.