‘கோர்ட் வாசல் ஏறியும் தீராத பஞ்சாயத்து..’ மனைவி ஜீவனாம்சத்தை சில்லறையாக எடுத்து வந்த ‘நாணய’ கணவன்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘கோர்ட் வாசல் ஏறியும் தீராத பஞ்சாயத்து..’ மனைவி ஜீவனாம்சத்தை சில்லறையாக எடுத்து வந்த ‘நாணய’ கணவன்!

‘கோர்ட் வாசல் ஏறியும் தீராத பஞ்சாயத்து..’ மனைவி ஜீவனாம்சத்தை சில்லறையாக எடுத்து வந்த ‘நாணய’ கணவன்!

HT Tamil HT Tamil Published Dec 19, 2024 07:00 PM IST
HT Tamil HT Tamil
Published Dec 19, 2024 07:00 PM IST

‘பின்னர் நீதிபதியிடம் சென்ற அவர், மனைவிக்கு கொடுக்க வேண்டிய ஜீவனாம்ச தொகையின் ஒரு பகுதியான, 80 ஆயிரம் ரூபாயை, பொடி சில்லறையாக கொண்டு வந்திருப்பதாக கூறி, இரு பைகளை நீட்டியுள்ளார்’

‘கோர்ட் வாசல் ஏறியும் தீராத பஞ்சாயத்து.. மனைவி ஜீவனாம்சத்தை சில்லறையாக எடுத்து வந்த ‘நாணய’ கணவன்!
‘கோர்ட் வாசல் ஏறியும் தீராத பஞ்சாயத்து.. மனைவி ஜீவனாம்சத்தை சில்லறையாக எடுத்து வந்த ‘நாணய’ கணவன்!

சினிமா நட்சத்திரங்கள் மட்டுமின்றி, பொதுவாழ்வில், பலரும் இந்த கடினமான முடிவுக்கு வருவதை நம்மால் காண முடிகிறது. இதெல்லாம் ஏன் நடக்கிறது என்று கவலைப்படும் அளவிற்கு, விவாகரத்துகளும் அதிகரித்துவிட்டது. ஆனால், அந்த விவாகரத்திற்குப் பிறகும், வஞ்சம் தொடர்ந்தால் எப்படி இருக்கும்? என்பதற்கு உதாரணம் தான், இந்த தகவல்.

கோவை நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

கோவை, குடும்ப நல நீதிமன்றத்தில் தம்பதி ஒருவர் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வழக்கு நடைபெற்று வந்தது. ஒரு கட்டத்தில் வழக்கு நிறைவு கட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து, விசாரித்த நீதிபதி, மனைவிக்கு இரண்டு லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்குமாறு கணவருக்கு தீர்ப்பு வழங்கினார். 

அதைக் ஏற்றுக் கொண்ட கணவர், நீதிமன்ற உத்தரவுப்படி, விவாகரத்து பெற்ற மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க 80 ஆயிரம் ரூபாயை நீதிமன்றத்திற்கு எடுத்து வந்தார். காரில் வந்து இறங்கிய அவர், கத்தையாக கொடுப்பார் என்று பார்த்தால், இரண்டு கைகளில் கொத்து கொத்தாக 20 பைகளுடன் நீதிமன்றம் சென்றார். 80 ஆயிரம் ரூபாய்க்கு எதற்கு இவர் 20 பைகள் எடுத்துச் செல்கிறார் என்று, பார்த்த அனைவருக்கும் ஒரே குழப்பம்.

திருப்பி அனுப்பிய நீதிபதி

பின்னர் நீதிபதியிடம் சென்ற அவர், மனைவிக்கு கொடுக்க வேண்டிய ஜீவனாம்ச தொகையின் ஒரு பகுதியான, 80 ஆயிரம் ரூபாயை, பொடி சில்லறையாக கொண்டு வந்திருப்பதாக, இரு  பைகளை நீட்டியுள்ளார். தனது இந்த செயல் மூலம், மனைவிக்கு ஏதோ ஒரு விசயத்தை சொல்ல அவர் முயற்சிப்பதையும், அவரது வன்மத்தையும் புரிந்து கொண்ட நீதிபதி, அந்த சில்லறையை ஏற்க மறுத்து, அவற்றை ரூபாய் நோட்டுகளாக மாற்றி வருமாறு அந்த கணவருக்கு அறிவுரை வழங்கி, வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தார். 

மனைவிக்கு பல்பு  கொடுக்கலாம் என்று திட்டமிட்டு வந்த கணவருக்கு, பெரிய பல்பு கிடைத்ததால், ஏமாற்றத்துடன் தான் கொண்டு வந்த சில்லறை மூட்டைகளை, காரில் ஏற்றிக் கொண்டு, அவற்றை ரூபாய் நோட்டுகளாக மாற்றப் காரில் புறப்பட்டார் ‘நாணயமான’ கணவர்! இந்த சம்பவத்தை பார்த்தவர்கள், ‘கோர்ட் படி ஏறியும்.. இவங்க பஞ்சாயத்து இன்னும் முடியலயே..’ என்று பேசிச் சென்றதை காண முடிந்தது.