Annamalai : தமிழக அமைச்சர்களுக்கு செலட்டிவ் அம்னீஷியா நோய் வந்துடுச்சா.. இந்த தேர்தல் ஒரு வேண்டாத வேலை-அண்ணாமலை காட்டம்
Annamalai : மீண்டும் அந்த வெள்ளை அறிக்கையை கொடுக்க தயாராக இருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டிற்கு ரூ.11 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோவுக்கு மட்டும் ரூ.43 ஆயிரம் கோடி வாங்கி கொடுத்துள்ளோம்.

Annamalai : எடப்பாடி பழனிச்சமி தமிழக அரசின் கடன் குறித்து விமர்சித்து இருந்த நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று காலை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய அரசு முறையாக நிதி வழங்கவில்லை பாரபட்சம் காட்டுவதாக தெரிகிறது
"தமிழகத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கி வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.43 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்கியுள்ளதாக கூறிய அவர், 36 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை மீண்டும் கொடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
தமிழக அமைச்சர்களுக்கு செலட்டிவ் அம்னீஷியா நோயா
மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதிப் பங்கீட்டை கொடுக்கவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டி இருந்தார். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதியை கொடுத்துள்ளதாக கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தென் இந்தியாவில் உள்ள 5 மாநிலங்களுக்கும் சேர்த்தே ரூ.27 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது என்று தெரிவித்தார்.