'FIR எப்படி ரிலீஸ் ஆச்சு? அந்தப் பொண்ண தப்பா காட்ட முயற்சி.. முருகனிடம் முறையிடுவேன்' ஷூவை கழட்டிய அண்ணாமலை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  'Fir எப்படி ரிலீஸ் ஆச்சு? அந்தப் பொண்ண தப்பா காட்ட முயற்சி.. முருகனிடம் முறையிடுவேன்' ஷூவை கழட்டிய அண்ணாமலை!

'FIR எப்படி ரிலீஸ் ஆச்சு? அந்தப் பொண்ண தப்பா காட்ட முயற்சி.. முருகனிடம் முறையிடுவேன்' ஷூவை கழட்டிய அண்ணாமலை!

Pandeeswari Gurusamy HT Tamil
Dec 26, 2024 05:06 PM IST

நாளையில் இருந்து 48 நாட்கள் விரதம் இருந்து ஆறுபடை முருகனிடம் முறையிட போகின்றேன். ஆரோக்கியமான அரசியல், இனி மரியாதை வெங்காயமெல்லாம் கிடையாது. நாளை எனக்கு நானே சவுக்கால் அடித்து கொள்வேன். தொண்டர்களை செய்ய சொல்ல வில்லை. வீட்டு வாசலில் நின்றார்கள் போதும். மக்கள் கவனத்தை ஈர்க்க வேறு வழியில்லை.

'FIR எப்படி ரிலீஸ் ஆச்சு? அந்தப் பொண்ண தப்பா காட்ட முயற்சி.. முருகனிடம் முறையிடுவேன்' ஷூவை கழட்டிய அண்ணாமலை!
'FIR எப்படி ரிலீஸ் ஆச்சு? அந்தப் பொண்ண தப்பா காட்ட முயற்சி.. முருகனிடம் முறையிடுவேன்' ஷூவை கழட்டிய அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கை எப்படி யாரால் வெளியிடப்பட்டது? அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், கைபேசி எண், குடும்ப விவரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அந்த பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை வெளியிடக்கூடாது என கூறப்பட்டிருந்தும் காவல்துறையினர் இது போன்று பெண்களுக்கு எதிரான செயல்களை செய்கின்றனர்.

மேலும் மிகவும் மோசமான வகையில் முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பல்கலை வளாகத்தில் உரிய சிசிடிவி கண்காணிப்பு கூட பொருத்தப்படவில்லை, ஒரு பெண் மட்டுமல்லாமல் பலரையும் அவர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்திருப்பார் என சந்தேகிக்கப்படுகிறது.

இப்படி குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி திமுகவில் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார். துணை முதல்வர் உட்பட பல்வேறு அமைச்சர்களோடு அவர் புகைப்படம் எடுத்து நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். அவர் மீது உடனடியாக சார்ஜ் சீட் பதிந்து, நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று உரிய தண்டனை வழங்கிட வேண்டும்.

நாளையில் இருந்து 48 நாட்கள் விரதம் இருந்து அறுபடை முருகனிடம் முறையிட போகின்றேன். ஆரோக்கியமான அரசியல், இனி மரியாதை வெங்காயமெல்லாம் கிடையாது. நாளை எனக்கு நானே சவுக்கால் அடித்து கொள்வேன். தொண்டர்களை செய்ய சொல்ல வில்லை. வீட்டு வாசலில் நின்றால் போதும். மக்கள் கவனத்தை ஈர்க்க வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார்.

கமிஷ்னர் பதவி விலக வேண்டும்

நடுத்தர மக்கள் வெளியில் வாங்க... மீடியாவில் இதை விவாதிக்க வேண்டும். இதை பேச வேண்டும். இதற்கு பொறுப்பேற்று கமிஷனர் பதவி விலக வேண்டும். குறைந்தது டெபுடி கமிஷ்னர் பதவி விலக வேண்டும். FIR எப்படி வெளி வந்தது. அந்த பெண் சரியில்லாதவர் என்பதை காட்ட வேண்டும் என்பதற்காக இதை வெளியிட்டு இருக்கின்றனர்.

கை,கால் உடைப்பு ஒரு தண்டனையா ?

உண்மையான அரசாக இருந்தால் 10 நாளில் குற்றபத்திரிகை தாக்கல் செய்து தண்டணை கொடுக்க வேண்டும். அண்ணாமலைக்கு பொய் சொல்வது மட்டும் வேலை என அமைச்சர் ரகுபதி சொல்கின்றார். தப்பு பண்ணினால் சொல்வது எங்க வேலை, பதில் சொல்வது உங்கள் வேலை. எங்களை நாங்களே வருத்திக்கொண்டு போராட இருக்கின்றோம். நிர்பயா நிதி கொடுத்து இருக்கின்றோம் சார். அது எங்கே போச்சு. அது எதற்கு கொடுத்தோம்.

முன்பே பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு இருக்கின்றார் அந்த நபர். அது ஒரு நாள் குற்றமா என தெரியவில்லை. விரச கதைகளை போல இருக்கு. சித்தாந்தம், லொட்டு,லொசுக்கு எல்லாம் இனி பார்க்க போவதில்லை. வேறு மாதிரி அரசியல் செய்யனும்

சமூக நீதியை பற்றி பேச வெட்கப்பட வேண்டும்.

நேற்று ஒரு தேவாலயத்திற்கு போக விட மாட்றானுக. ஒரு சர்ச்சுல போயி மாஸ் அட்டன் பண்ண விடமாட்றாங்க. சமூக நீதிக்கு பா.ஜ.க என்ன செய்து இருக்கு, திமுக என்ன செய்து இருக்கு என பேசலாம். பீகார், உ.பி யில் இரட்டை குவளை கிடையாது. தமிழகத்தில் இருக்கு என்றார்.

இனி செருப்பு இல்லை.. 48 நாள் விரதம்

கோவை இல்லத்தில் நாளை சவுக்கால் அடித்து கொள்கிறேன். செய்தி தொடர்பாளர் முறையாக இந்த போராட்டம் குறித்து சொல்லுவார்.

திமுக ஆட்சி அகலும் வரை இனி செருப்பு போட போவதில்லை எனக்கூறி காலில் அணிந்திருந்த ஷூ வை செய்தியாளர்கள் முன் கழட்டினார். அது மட்டும் இல்லாமல் 48 நாள் விரதம் இருந்து அறுபடை வீடுகளுக்கு பயணம் செய்யப்போவதாகவும் அண்ணாமலை அதிரடியாக தெரிவித்தார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.