மோசடி புகார்.. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலஜியை சிபிஐ விசாரிக்கலாம்.. கறார் காட்டிய ஹைகோர்ட்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மோசடி புகார்.. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலஜியை சிபிஐ விசாரிக்கலாம்.. கறார் காட்டிய ஹைகோர்ட்

மோசடி புகார்.. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலஜியை சிபிஐ விசாரிக்கலாம்.. கறார் காட்டிய ஹைகோர்ட்

Malavica Natarajan HT Tamil
Published Apr 29, 2025 02:11 PM IST

வேலை வாங்கித் தருவதாக கூறி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கை சிபிஐக்கு ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

மோசடி புகார்.. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலஜியை சிபிஐ விசாரிக்கலாம்.. கறார் காட்டிய ஹைகோர்ட்
மோசடி புகார்.. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலஜியை சிபிஐ விசாரிக்கலாம்.. கறார் காட்டிய ஹைகோர்ட்

சிபிஐ விசாரணைக்கு அனுமதி

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டி, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்க முடியாது என கூறி காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் எனவும் கூறியிருக்கிறரா்.

ராஜேந்திர பாலாஜி மீது மோசடி வழக்கு

அதிமுக ஆட்சியின் போது, பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக அதிமுக நிர்வாகி ரவீந்திரன் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது புகார் அளித்திருந்தார். பின் இந்த வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரியும் கடந்த 2021ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார்.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

அந்த வழக்கின் விசாரணையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படாததால், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கூடாது என்றும், அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கூடாது என வலியுறுத்தியும், காவல்துறை மற்றும் ராஜேந்திர பாலாஜி தரப்பு மனுதாக்கல் செய்தனர்.

இடைக்கால தடையும்- ஆளுநர் ஒப்புதலும்

அத்துடன், வழக்கை சிபிஐக்கு மாற்றக் கூடாது என ராஜேந்திர பாலாஜி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடையும் பிறப்பித்தது.

இந்த சமயத்தில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவிக்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழ்நாடு அரசு அனுப்பியதைத் தொடர்ந்து அவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மோசடி வழக்கில் நடவடிக்கை எடுக்கலாம் என அனுமதி அளித்தார். இதையடுத்து, விருதுநகர் நீதிமன்றம் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. முன்னதாக, இந்த வழக்கால் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை போலீசார் பெங்களூருவில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.