தலைப்பு செய்திகள்: 13 இடங்களில் வெயில் சதம் முதல் வள்ளுவர் கோட்டம் திறப்பு வரை! இன்றைய முக்கிய செய்திகள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தலைப்பு செய்திகள்: 13 இடங்களில் வெயில் சதம் முதல் வள்ளுவர் கோட்டம் திறப்பு வரை! இன்றைய முக்கிய செய்திகள்!

தலைப்பு செய்திகள்: 13 இடங்களில் வெயில் சதம் முதல் வள்ளுவர் கோட்டம் திறப்பு வரை! இன்றைய முக்கிய செய்திகள்!

Kathiravan V HT Tamil
Published Jun 21, 2025 07:48 AM IST

13 இடங்களில் வெயில் சதம், புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் திறப்பு, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை, அமெரிக்க தூதரகம் முற்றுகை உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தலைப்பு செய்திகள்: 13 இடங்களில் வெயில் சதம் முதல் வள்ளுவர் கோட்டம் திறப்பு வரை! இன்றைய முக்கிய செய்திகள்!
தலைப்பு செய்திகள்: 13 இடங்களில் வெயில் சதம் முதல் வள்ளுவர் கோட்டம் திறப்பு வரை! இன்றைய முக்கிய செய்திகள்!

1.13 இடங்களில் வெயில் சதம்

தமிழ்நாட்டில் 13 இடங்களில் வெப்பம் சதமடித்தது, இதில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.26 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னையின் பல்வேறு இடங்களிலும், புறநகர்ப் பகுதிகளிலும் இரவு நேரத்தில் திடீர் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

2.புதுப்பொலிவுடன் வள்ளுவர் கோட்டம் திறப்பு

சென்னையின் அடையாளமான வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவுடன் இன்று திறக்கப்படவுள்ளது. 80 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக புனரமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

3.கீழடி அகழாய்வு குறித்த அரசியல் விவாதம்

கீழடி ஆராய்ச்சிக்கு வித்திட்டது அ.தி.மு.க. ஆட்சிதான் என முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் பெருமிதம் தெரிவித்தார். தமிழ்நாட்டில் தற்போது எட்டு அகழாய்வுகள் நடைபெற்று வருவதாகவும், இவற்றுக்கெல்லாம் புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆட்சியில் தான் வித்திடப்பட்டது என்றும், 15 தொல்லியல் நிபுணர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். 

4.திமுக எம்.எல்.ஏ எழிலன் பதிலடி 

அ.தி.மு.க.விற்கும் கீழடி ஆராய்ச்சிப் பணிகள் நடப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எளிலன் பதிலடி ஓர் ஆண்டுக்கு சராசரியாக இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கி வந்த துறைக்கு தி.மு.க. அரசு ஆண்டுக்கு 105 கோடி ரூபாய் ஒதுக்கியதாகக் கூறியது அப்பட்டமான பொய் என தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எழிலன் பதிலடி.

5.தம்பதியை பிடித்து விசாரணை 

சென்னை மெரினாவில் காவலருக்கு உயிர் பயத்தை காட்டி, அவர் மீது ஏற்றுவது போல கார் ஓட்டிச் சென்ற ஒரு தம்பதியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

6.முட்புதருக்குள் பச்சிளம் குழந்தை - போக்சோவில் காதலன் கைது

திருத்தணி அரசு மருத்துவமனை அருகே முட்புதருக்குள் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய காதலன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. 

7.தஞ்சை ஆட்சியருக்கு 5000 அபராதம் 

ஆக்கிரமிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகளாக பதில்மனு தாக்கல் செய்யாத தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு ரூ.5,000 அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அபராதம் செலுத்த தவறினால் ஒவ்வொரு நாளும் அபராதத்தொகை இரட்டிப்பாகும் எனவும் நீதிமன்றம் எச்சரிக்கை.

8.நெல்வேலி விவகாரம் - அன்புமணி எச்சரிக்கை 

நெய்வேலி என்.எல்.சி. பிரச்சினையை தீர்க்காவிட்டால் எத்தனை வஜ்ரா வாகனங்கள் வந்தாலும் தங்களை தடுக்க முடியாது  என கடலூரில் நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ஆவேசம்.

9.ஜி.கே.மணியை நலம் விசாரித்த ராமதாஸ்

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பா.ம.க. கௌரவத் தலைவர் ஜி.கே. மணியை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

10.அமெரிக்காவை கண்டித்து போராட்டம் 

இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கி போரை ஊக்குவிக்கும் அமெரிக்க அரசை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி. தமிமுன் அன்சாரி, கருணாஸ், செல்வப்பெருந்தகை, முத்தரசன், தியாகு ஆகியோர் பங்கேற்பு.