HBD Nammalvar : இறுதி வரை இயற்கை விவசாயத்துக்காக குரல் கொடுத்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த தினம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Hbd Nammalvar : இறுதி வரை இயற்கை விவசாயத்துக்காக குரல் கொடுத்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த தினம்!

HBD Nammalvar : இறுதி வரை இயற்கை விவசாயத்துக்காக குரல் கொடுத்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த தினம்!

Priyadarshini R HT Tamil
Published Apr 05, 2024 10:44 PM IST

HBD Nammalvar : அவர் புதுக்கோட்டையில் ஆராய்ச்சி மையத்தை துவங்கினார். வரலாற்று சிறப்புமிக்க மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை வகித்தார். தன் வாழ்நாள் முழுவதும் இயற்கை விவசாயத்தை ஆதரித்தார்.

HBD Nammalvar : இறுதி வரை இயற்கை விவசாயத்துக்காக குரல் கொடுத்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த தினம்!
HBD Nammalvar : இறுதி வரை இயற்கை விவசாயத்துக்காக குரல் கொடுத்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த தினம்!

இவர் இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் குறித்து பல்வேறு தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை எழுதியுள்ளார். இது பல்வேறு நாளிதழ்கள், வார இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இளங்காடு என்ற கிராமத்தில் பிறந்தவர் நம்மாழ்வார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக்கத்தில் வேளாண்மையில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரியத்துவங்கினார்.

அது கோவில்பட்டியில் உள்ள அரசு நிறுவனம் ஆகும். அங்கு விஞ்ஞானியாக பருத்தி மற்றும் சிறுதானிய பயிர்களில் வேதி பூச்சிக்கொல்லிகளை வைத்து பல்வேறு அளவுகளில் ஆராய்ச்சி செய்தார். அவர் அங்கு பணிபுரிந்தபோது, அரசு அங்கு வானம் பார்த்த பூமியில் பயிரிடுவது குறித்த பல்வேறு ஆராய்ச்சிகள் செய்தது. ஹைபிரிட் விதைகளை பயன்படுத்தி, விலையுயர்ந்த வேதி உரங்களைப்பயன்டுத்தியது.

இது வானம் பார்த்த பூமி விவசாயிகளுக்கு உதவாது. எனவே அதற்கு அரசு வேறு ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று கூறினார். ஆனால் அவரது கூற்றை யாரும் ஏற்கவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர் அங்கிருந்து வெளியேறினார்.

அடுத்த 10 ஆண்டுகளில், அமைதி தீவில், வேளாண் விஞ்ஞானியாக இருந்தார். இது நோபல் பரிசு பெற்ற டோமினிக் பயர் என்பவர் நிறுவிய நிறுவனம் ஆகும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கலக்காடு வட்டத்தில் வேளாண் வளர்ச்சியின் மூலம், வாழ்வாதரத்தை உயர்த்துவது இவரது நோக்கமாக இருந்தது. அப்போதுதான் அவர் கழிவுகளை மீண்டும் உபயோகிக்கும் முறையை அவர் ஊக்கப்படுத்தி வளர்த்தெடுக்க முயற்சி செய்தார். இது அவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. எனவே இவர் நிலையான வேளாண் முறைகளை பரிசோதித்து பார்க்கத் துவங்கினார்.

70களின் இறுதியில் நம்மாழ்வார், பாவ்லோ ஃபெரைரி மற்றும் வினோபாபாவேயின் கல்வி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். கல்வியின் குறிக்கோளே சுதந்திரம், சுதந்திரம் என்பது தன்னிறைவு, தன்னிறைவு என்பது ஒருவர் தனது அன்றாட உணவுக்காக மற்றவரை சாராமல் இருப்பது என உணர்ந்தார். ஒரு தனது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ஒருவர் தனது உணர்வுகள் மற்றும் சிந்தனைகளில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று எண்ணினார். விவசாயிகள் தன்னிறைவு பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். இவர் உள்ளூர் விவசாயிகளிடம் பேசி, அவர்களின் தேவைக்கு ஏற்ப விவசாய முறைகளைக்கொண்டு வந்தார்.

நம்மாழ்வார், நெதர்லாந்தில் சுற்றுச்சூழல் வேளாண்மை குறித்து ஒரு மாத பயிற்சி பெற்றார். இவர் குறைவான உட்பொருளில் நீடித்த வேளாண்மை என்பதை தோற்றுவித்தார். சூழலுக்கு உகந்த விவசாயத்தை வலியுறுத்தினார். அதில் அவர் தன்னிறைவு மற்றும் குறைவான உள்ளீடுகளை பயன்படுத்துவதை வலியுறுத்தினார்.

அவர் புதுக்கோட்டையில் ஆராய்ச்சி மையத்தை துவங்கினார். வரலாற்று சிறப்புமிக்க மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை வகித்தார். தன் வாழ்நாள் முழுவதும் இயற்கை விவசாயத்தை ஆதரித்தார். பிளாஸ்டிக் ஒழிப்பு என இயற்கையுடன் இயைந்த வாழ்வு வாழ ஊக்குவித்தார். இவரது பிறந்த நாளில் அவர்குறித்த சில தகவல்களை ஹெச்.டி. தமிழ் பகிர்ந்துகொள்கிறது.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.