‘துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. மாநாட்டில் அரசியல் செய்கிறார்கள்’ ஆர்.என்.ரவி பேச்சு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. மாநாட்டில் அரசியல் செய்கிறார்கள்’ ஆர்.என்.ரவி பேச்சு

‘துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. மாநாட்டில் அரசியல் செய்கிறார்கள்’ ஆர்.என்.ரவி பேச்சு

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Apr 25, 2025 01:35 PM IST

‘மாநாட்டில் பங்கேற்க இருந்த துணை வேந்தர்களை உளவுத்துறை போலீசாரை வைத்து மிரட்டி உள்ளார்கள். துணை வேந்தர்கள் மாநாட்டில் அரசியல் செய்கிறார்கள்’

‘துணைவேந்தர்களுக்கு மிரட்டில்.. மாநாட்டில் அரசியல் செய்கிறார்கள்’ ஆர்.என்.ரவி பேச்சு
‘துணைவேந்தர்களுக்கு மிரட்டில்.. மாநாட்டில் அரசியல் செய்கிறார்கள்’ ஆர்.என்.ரவி பேச்சு

‘‘துணை குடியரசு தலைவர் கலந்து கொண்டு இருப்பது மிகவும் முக்கியமானது. தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் சிறப்பாக உள்ளது. அரசு பள்ளிகள் நிலை மோசமாக உள்ளது. இந்த இரண்டு நாள் மாநாடு மிக முக்கியமானது. இந்த மாநாடு கல்வியை அடுத்த கட்டம் கொண்டு செல்ல மிக உதவியாக இருக்கும், அதற்காக விவாதிக்க இருக்கிறோம்.

தமிழ்நாடு பல்கலைகழகங்களை சேர்ந்த யாரும் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டு உள்ளார்கள். ASR ரிப்போர்ட் அறிக்கை படி அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுத படிக்கத் தெரியவில்லை. சிங்கிள் டிஜிட் எண்கள் படிக்க தெரியவில்லை. மாநில பல்கலைகழகங்கள் பட்டாதாரிகளை உருவாக்குவதைத் தாண்டி, அவர்களுக்கு தரமான கல்வியை வழங்கவில்லை.

மாநாட்டில் பங்கேற்க இருந்த துணை வேந்தர்களை உளவுத்துறை போலீசாரை வைத்து மிரட்டி உள்ளார்கள். துணை வேந்தர்கள் மாநாட்டில் அரசியல் செய்கிறார்கள்,’’ என்று மாநாட்டில் ஆர்.என்.ரவி பேசினார்.

துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பு

முன்னதாக மாநாட்டு துவக்க விழா மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று தமிழகம் வந்துள்ளார்.

டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் காலை 10.40 மணியளவில் கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தடைந்த குடியரசுத் துணைத் தலைவரை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட காவல் ஆணையாளர் சரவணன் சுந்தர் ஆகியோர் வரவேற்றனர்.

இதனையடுத்து, தனி ஹெலிகாப்டர் மூலம் குடியரசுத் துணைத் தலைவர் உதகைக்கு புறப்பட்டார். அங்கு துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

Stalin Navaneethakrishnan

TwittereMail
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் எடிட்டராக பணியாற்றி வருகிறார். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், தேசம், சர்வதேசம், பொழுதுபோக்கு, ஜோதிடம், ஆன்மிகம், விளையாட்டு, வியாபாரம், லைப்ஸ்டைல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் செய்திகளை எழுதுவதுடன், இணையதளத்தையும் வழிநடத்தி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பிபிஏ முடித்துள்ள இவர், தினபூமி, தினமலர், நியூஸ் 18, ஏபிபி நாடு ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.