R.N. Ravi : காவி நிற உடை அணிந்த வள்ளுவர் படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை.. கொந்தளித்த காங்கிரஸ் தலைவர்!
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ வள்ளுவர் படத்தை பயன்படுத்தாமல் காவி உடையில் இருக்கும் வள்ளுவர் படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை செலுத்தி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த புகைப்படம் ஆளுநர் மாளிகை எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இன்று திருவள்ளுவர்தினத்தையொட்டி திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். இந்நிலையில் இன்று ஆளுநர் ஆர்.என் ரவி. காவி நிறத்தில் இருந்த திருவள்ளுவர் படத்திற்கு மரியாதை செலுத்தி உள்ளார். தமிழக அரசின் அதிகாரப்பூர்வ வள்ளுவர் படத்தை பயன்படுத்தாமல் காவி உடையில் இருக்கும் வள்ளுவர் படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை செலுத்தி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த புகைப்படம் ஆளுநர் மாளிகை எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை எக்ஸ் பதிவு
மேலும் திருவள்ளுவர் தினத்தை யொட்டி ஆளுநர் மாளிகை எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது, பாரதத்தின் தமிழ் போற்றும் தெய்வப்புலவர் திருவள்ளுவரை தேசம் ஆழ்ந்த நன்றியுடனும், மிகுந்த பக்தியுடனும் நினைவு கூர்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அவர் ஒவ்வொரு தனி மனிதனுக்கும், அமைப்புக்கும் பொருந்தும் வகையில் ஒப்பற்ற வழிகாட்டியான திருக்குறளை வழங்கினார்.
பாரதத்தின் சனாதன நாகரிக மரபில் கடவுள் பக்தியின் உன்னதத்தையும் நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையில் நன்னடத்தையின் ஆழத்தையும் அவர் நமக்கு கற்பித்துள்ளார். சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஒரு விரிவான நல்லொழுக்க குறியீட்டை அவர் வகுத்தார். நாம் இன்று திருவள்ளுவர் தினத்தை கொண்டாடும் அதே வேளையில், அவர் தினமும் நினைவு கூரப்பட்டு கொண்டாடப்பட வேண்டும். திருவள்ளுவரின் சிறந்த பக்தரான மாண்புமிகு பிரதமர் மோடிக்கு நன்றி. திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன என்ற பதிவிடப்பட்டுள்ளது.