Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு பேரிடி.. மீண்டும் மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு பேரிடி.. மீண்டும் மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ!

Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு பேரிடி.. மீண்டும் மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ!

Karthikeyan S HT Tamil
Jan 29, 2025 10:20 AM IST

Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு பேரிடி.. மீண்டும் மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ!
Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு பேரிடி.. மீண்டும் மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ!

சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கமாக காணப்பட்டது. தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜனவரி 29) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.60,760-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.85 உயர்ந்து ரூ.7,595-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜனவரி 28) ஒரு சவரன் ரூ.60,080-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7,510-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.104-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.104,000க்கும் விற்பனையாகிறது.

நேற்றைய வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நேற்று (ஜனவரி 28) ஒரு கிராம் ரூ.104.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.104,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை உயர்வு ஏன்?

இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பெண் குழந்தை என்றால் திருமணம் செய்து கொடுக்கும்போது பல சவரன் நகையை அணிவித்து அனுப்பும் பழக்கம் பல குடும்பங்களில் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. ஆபத்து காலங்களில் அடகு வைப்பதற்கும் தங்க நகைகள் உபயோகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

தங்க பத்திர முதலீடு

மத்திய தங்க பத்திர முதலீடு திட்டத்தை கொண்டுவந்துள்ள போதிலும், தங்கம் விற்பனையாவது குறையவில்லை என்பதே உண்மை. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் சற்று பயந்து போனது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது. இன்றைய தங்கம் விலைதங்கமானது வரலாற்று ரீதியாக அரிய உலோகமாகவே கருதப்பட்டு வந்தது. காரட் என்ற அலகால் தங்கம் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது தூயத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது.

22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தங்கத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.