Gold Price Today: பட்ஜெட் நாளிலும் ஏற்றம்.. புதிய உச்சத்தை தொடும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன?
Gold Price Today: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளான இன்று தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நிலையில் பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் தங்கம் விலை முன் எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.
அதன்படி, சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கமாக காணப்பட்டது. இந்த மாதத்தின் தொடக்க நாளான இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், தங்கம் விலை கிராமுக்கு ரூ. 15,சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 1) சவரனுக்கு ரூ.61,920க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.7,745க்கு விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6,395க்கும், ஒரு சவரன் ரூ.80 உயர்ந்து ரூ.51,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலை நிலவரத்தை பொறுத்தவரை இன்று (பிப்ரவரி 1) எந்த மாற்றமும் இல்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ. 107, ஒரு கிலோ ரூ. 1,07,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று விலை என்ன
நேற்றைய தங்கம் விலை நிலவரத்தை பொறுத்தவரையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை (ஜனவரி 31) ஒரு சவரன் ரூ.61,840க்கும், கிராம் ஒன்றுக்கு ரூ. 7,730க்கும் விற்கப்பட்டது. அதேபோல் வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ரூ.107க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,07,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பெண் குழந்தை என்றால் திருமணம் செய்து கொடுக்கும்போது பல சவரன் நகையை அணிவித்து அனுப்பும் பழக்கம் பல குடும்பங்களில் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. ஆபத்து காலங்களில் அடகு வைப்பதற்கும் தங்க நகைகள் உபயோகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மத்திய தங்க பத்திர முதலீடு திட்டம்
மத்திய தங்க பத்திர முதலீடு திட்டத்தை கொண்டுவந்துள்ள போதிலும், தங்கம் விற்பனையாவது குறையவில்லை என்பதே உண்மை. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் சற்று பயந்து போனது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது.
தங்கமானது வரலாற்று ரீதியாக அரிய உலோகமாகவே கருதப்பட்டு வந்தது. காரட் என்ற அலகால் தங்கம் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது தூயத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22 காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். தங்கத்தில் சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப அதன் மதிப்பு கிடைக்கிறது. காரட் மாற்றங்களுக்கு ஏற்ப தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.

டாபிக்ஸ்