மாணவி வன்கொடுமை.. இரண்டு பொண்டாட்டி.. 3ஆவதாக லிவ்-இன்னில் இருந்த ஞானசேகரன் - பக்கத்துவீட்டு அம்மா சொன்ன பகீர்
மாணவி வன்கொடுமை.. இரண்டு பொண்டாட்டி.. 3ஆவதாக லிவ்-இன்னில் இருந்த ஞானசேகரன் - பக்கத்துவீட்டு அம்மா சொன்ன பகீர்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, பல்கலைக்கழக பின்புற நடைபாதையில் பிரியாணிக்கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக போலீசார் ஞானசேகரனை கைது செய்யும் போது தப்பி ஓடியதால் கீழே விழுந்து இடது கால், இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கைதிகளுக்கான வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
