’இந்தியா - பாகிஸ்தான் போர் இன்றோ நாளையோ முடியாது! அடிச்சா திருப்பி அடிக்கணும்!’ அண்ணாமலை ஆவேச பேட்டி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’இந்தியா - பாகிஸ்தான் போர் இன்றோ நாளையோ முடியாது! அடிச்சா திருப்பி அடிக்கணும்!’ அண்ணாமலை ஆவேச பேட்டி!

’இந்தியா - பாகிஸ்தான் போர் இன்றோ நாளையோ முடியாது! அடிச்சா திருப்பி அடிக்கணும்!’ அண்ணாமலை ஆவேச பேட்டி!

Kathiravan V HT Tamil
Published May 10, 2025 11:59 AM IST

"நம்ம மேல ஒருத்தன் போர் தொடுக்கும் பொழுது திரும்பி நாம பதிலடி கொடுக்கலனா நம்ம கோழை"

’இந்தியா - பாகிஸ்தான் போர் இன்றோ நாளையோ முடியாது! அடிச்சா திருப்பி அடிக்கணும்!’ அண்ணாமலை ஆவேச பேட்டி!
’இந்தியா - பாகிஸ்தான் போர் இன்றோ நாளையோ முடியாது! அடிச்சா திருப்பி அடிக்கணும்!’ அண்ணாமலை ஆவேச பேட்டி!

பாகிஸ்தானின் அத்துமீறல்கள் 

கடந்த கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்த அவர், 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தியா அமைதி வழியில் நடவடிக்கை கோரியதையும், 2016 பதான்கோட் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் அதிகாரிகளை இந்தியாவுக்கு அழைத்து விசாரணைக்கு அனுமதித்ததையும், ஆனால் பாகிஸ்தான் அதனை அவமதித்ததையும் குறிப்பிட்டார். ஊரி தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததாகவும், புல்வாமா தாக்குதலுக்கு பாலாகோட்டில் வான்வழித் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்ததாகவும் தெரிவித்தார். "பாகிஸ்தான் செய்யக்கூடிய எல்லா தவறுகளுக்குமே நம்முடைய பதிலடி என்பது ஒரு முறையும் ஒரு படி மேல மேல போறோம்" என்று அவர் கூறினார்.

அப்பாவிகள் மீது பாக் தாக்குதல் 

சமீபத்திய பகல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத மையங்களை குறிவைத்து தாக்கியதாகவும், இராணுவ நிலைகளைத் தாக்கவில்லை என்றும்” குறிப்பிட்டார். இதற்கு மாறாக, பாகிஸ்தான் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து எல்லைப் பகுதிகளில் ஷெல் தாக்குதல் நடத்துவதாகவும், காஷ்மீரில் உதவி கலெக்டர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 20க்கும் மேற்பட்ட அப்பாவிகள் உயிரிழந்ததாகவும் கூறினார். மேலும், கடந்த சில நாட்களாக நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் இந்திய பகுதிக்குள் அனுப்பப்படுவதாகவும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் தவறு செய்யும்போது இந்தியா தீவிரவாத மையங்களைத் தாக்கும் என்றும், ஆனால் பாகிஸ்தான் இந்திய பொதுமக்களைக் குறிவைப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். "நம்ம மேல ஒருத்தன் போர் தொடுக்கும் பொழுது திரும்பி நாம பதிலடி கொடுக்கலனா நம்ம கோழை" என்று அவர் வலியுறுத்தினார்.

பாகிஸ்தான் பொருளாதாரம் 

இந்தியா 4 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட பெரிய நாடு என்றும், பாகிஸ்தானுடன் சண்டையிட்டு நிலத்தை பிடிப்பது இந்தியாவின் நோக்கம் இல்லை என்றும், இது ரஷ்யா உக்ரைன் போன்ற போர் அல்ல என்றும், "இந்த போர் என்பது தீவிரவாதத்திற்கு எதிரான போர் இது இன்றோ நாளையோ முடியாது" என்றும் தெரிவித்தார்."பாகிஸ்தான் இதன் பிறகு நம்முடைய நடவடிக்கையை பார்த்த பிறகு இந்தியால இன்னொரு அப்பாவி பொதுமக்களுடைய உயிரை எடுப்பதற்கு பலமுறை யோசிக்கணும்" என்று கூறினார்.

எல்லை மாநிலங்களில் உள்ள இந்தியர்கள் பாகிஸ்தானின் தாக்குதல் எல்லைக்குள் இருப்பதைச் சுட்டிக்காட்டி, இந்த நேரத்தில் நாடாக ஒற்றுமையாக இருந்து பாதுகாப்புப் படைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பொது இடங்களில் கூட்டங்களைத் தவிர்ப்பது உள்ளிட்ட பாதுகாப்பு அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.