அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கைது!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கைது!

அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கைது!

Kathiravan V HT Tamil
Published Jun 05, 2025 11:29 AM IST

”சென்னை தரமணி பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி கலந்துகொண்ட நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர்”

அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கைது!
அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கைது!

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து, திமுக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தரமணியில் ஆர்ப்பாட்டம்

சென்னை தரமணி பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில், வேளச்சேரி அசோக் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், அம்மா பேரவை செயலாளர் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். காலி குடங்களுடன் பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். குடிநீர் தட்டுப்பாடு, மின்சார கட்டண உயர்வு, பால் விலை உயர்வு மற்றும் சுங்கவரி உயர்வு ஆகியவற்றால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக குற்றம்சாட்டியது.

திமுக அரசின் தோல்வி

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா மற்றும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்திய இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம், திமுக ஆட்சியில் மூடப்பட்டதாக அதிமுக குற்றம்சாட்டியது. பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் ரூ.1-க்கு வழங்கப்பட்ட அம்மா குடிநீர் திட்டமும் நிறுத்தப்பட்டதாகவும், இதனால் பயணிகள் தனியார் நிறுவனங்களிடம் ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்தி குடிநீர் வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அதிமுக விமர்சித்தது. ஆர்ப்பாட்டத்தை அடக்க காவல்துறை வலுக்கட்டாயமாக தலையிட்டு, வளர்மதி, வேளச்சேரி அசோக் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளை கைது செய்து பேருந்தில் அழைத்துச் சென்றது. கைது செய்யப்பட்டவர்கள், பேருந்தில் செல்லும்போதும் திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.