காருக்கு சுங்க கட்டணம் கேட்ட ஊழியர்கள்.. காரை சாலையின் குறுக்கே நிறுத்திய முன்னாள் எம்.எல்.ஏ., பயணிகள் அவதி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  காருக்கு சுங்க கட்டணம் கேட்ட ஊழியர்கள்.. காரை சாலையின் குறுக்கே நிறுத்திய முன்னாள் எம்.எல்.ஏ., பயணிகள் அவதி!

காருக்கு சுங்க கட்டணம் கேட்ட ஊழியர்கள்.. காரை சாலையின் குறுக்கே நிறுத்திய முன்னாள் எம்.எல்.ஏ., பயணிகள் அவதி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Mar 11, 2025 11:42 AM IST

‘நான் ஒரு கட்சியின் தேசிய துணைதலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற மரியாதை இல்லாவிட்டாலும் பரவாயில்லை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சுங்கச்சாவடியில் கட்டண சலுகை வழங்கப்படாது என உங்களது மேனேஜரிடம் சொல்லி எனக்கு கடிதம் வாங்கி கொடுங்கள்’

காருக்கு சுங்க கட்டணம் கேட்ட ஊழியர்கள்.. காரை சாலையின் குறுக்கே நிறுத்திய முன்னாள் எம்.எல்.ஏ., பயணிகள் அவதி!
காருக்கு சுங்க கட்டணம் கேட்ட ஊழியர்கள்.. காரை சாலையின் குறுக்கே நிறுத்திய முன்னாள் எம்.எல்.ஏ., பயணிகள் அவதி!

மிரட்டிய டோல்கேட் ஊழியர்கள் 

அப்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வேம்பரளி அருகே உள்ள சுங்க சாவடியில் அவரது காரை நிறுத்திய பணியாளர்கள் கட்டணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் நான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்னை அனுமதியுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு பணியாளர்கள் அவ்வாறெல்லாம் அனுமதிக்க முடியாது, பணத்தை கட்டி விட்டு ஒழுங்காக செல் என்று மிரட்டும் தொணியில் பேசியதாக கூறப்படுகிறது. 

மீண்டும் நான் ஒரு கட்சியின் தேசிய துணைதலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற மரியாதை இல்லாவிட்டாலும் பரவாயில்லை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சுங்கச்சாவடியில் கட்டண சலுகை வழங்கப்படாது என உங்களது மேனேஜரிடம் சொல்லி எனக்கு கடிதம் வாங்கி கொடுங்கள். நான் இரட்டிப்பு பணம் செலுத்தி சுங்கச்சாவடியை கடந்து செல்கிறேன் என கூறியுள்ளார். 

மீண்டும் மீண்டும் ஊழியர்கள் அத்துமீறல்

அதையும் ஏற்க மறுத்த பணியாளர்கள் நீ யாரிடம் வேண்டுமென்றால் சொல்லிக்கொள் பணம் கட்டாமல் இங்கிருந்து செல்ல முடியாது என மிரட்டும் தொணியில் பேசி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், அவரது காரை சுங்கச்சாவடியின் குறுக்கே நிறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடிக்கு வந்தனர். மேலும் சுங்கச்சாவடியில் இருந்து வெளியேறும் இடத்தில் கார்களைக் கொண்டு எந்த வாகனமும் வெளியே செல்ல முடியாத அளவிற்கு தடையை ஏற்படுத்தி அவர்கள் தங்களது போராட்டத்தை தொடங்கினர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி தகாத வார்த்தையில் பேசிய சுங்க சாவடி பணியாளர்கள் கோசலபூபதி, மணிகண்டன், அழகர் ஆகிய மூவரையும் விசாரணைக்காக நத்தம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

முன்னாள் எம்எல்ஏ வேம்பரளி டோல்கேட் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் நத்தம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பயணிகள், மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.