காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: ’நாளை நான் காஷ்மீர் செல்கிறேன்! எல்லோரும் காஷ்மீர் போகனும்!’ அண்ணாமலை ஆவேசம்
"நீ இந்துவா, முஸ்லிமா? குர்ஆனில் இருந்து இரண்டு வரிகள் சொல்," என்று கேட்டு, பதில் சொல்லாதவர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றதாக அண்ணாமலை குறிப்பிட்டார்

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல்: ’நாளை நான் காஷ்மீர் செல்கிறேன்’ அண்ணாமலை ஆவேசம்
காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்து உள்ள நிலையில் நாளை நான் காஷ்மீர் செல்கிறேன் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஜம்மு மற்றும் காஷ்மீரின் பெகல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலுக்கு பயந்து காஷ்மீர் பயணங்களை ரத்து செய்யக் கூடாது என்றும், "நாளை நான் காஷ்மீர் செல்கிறேன்," என்றும் கூறினார்.