’அரசியலுக்கு வந்து உள்ள தவெக தலைவர் விஜய் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்த வேண்டும்’ அண்ணாமலை அறிவுரை!
”காவல் துறையினர் சிறப்பாக செயல்படாமல், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாததால் குற்றங்கள் நடப்பதாகவும், குற்றங்களுக்கு மக்கள் மீது பழி திருப்பப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்”

’அரசியலுக்கு வந்து உள்ள தவெக தலைவர் விஜய் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்த வேண்டும்’ அண்ணாமலை அறிவுரை!
அதிமுக-பாஜக கூட்டணி குறித்து முதல்வருக்கு பயம் வந்துவிட்டதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, சிவகிரியில் நடைபெற்ற இரட்டைக் கொலை கண்டன ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். இதன்போது, கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துவிட்டதாக கடுமையாக விமர்சித்தார்.