OPS vs RB Udhayakumar: ’தனக்குதானே தம்பட்டம் அடிக்கும் ஓபிஎஸ்! ஜெயலலிதா சொன்னது என்ன தெரியுமா?’ விளாசும் ஆர்.பி.உதயமார்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ops Vs Rb Udhayakumar: ’தனக்குதானே தம்பட்டம் அடிக்கும் ஓபிஎஸ்! ஜெயலலிதா சொன்னது என்ன தெரியுமா?’ விளாசும் ஆர்.பி.உதயமார்

OPS vs RB Udhayakumar: ’தனக்குதானே தம்பட்டம் அடிக்கும் ஓபிஎஸ்! ஜெயலலிதா சொன்னது என்ன தெரியுமா?’ விளாசும் ஆர்.பி.உதயமார்

Kathiravan V HT Tamil
Published Feb 18, 2025 11:34 AM IST

டாக்டர் வெங்கடேஷ் அவர்கள் சோபாவில் அமர்ந்திருந்த போது இந்த உதயகுமார் எந்த இடத்தில் அமர்ந்திருந்தார் என்று சொன்னால் அரசியல் நாகரீகமாக இருக்காது என்று நீங்கள் சொல்லி உள்ளீர்கள் தயவு செய்து அதை சொல்லுங்கள் என ஓபிஎஸ்க்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி!

OPS vs RB Udhayakumar: ’தனக்குதானே தம்பட்டம் அடிக்கும் ஓபிஎஸ்! ஜெயலலிதா சொன்னது என்ன தெரியுமா?’ விளாசும் ஆர்.பி.உதயமார்
OPS vs RB Udhayakumar: ’தனக்குதானே தம்பட்டம் அடிக்கும் ஓபிஎஸ்! ஜெயலலிதா சொன்னது என்ன தெரியுமா?’ விளாசும் ஆர்.பி.உதயமார்

தனக்குத்தானே தம்பட்டம் 

முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில்,  ஓபிஎஸ்க்கு நான் நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன். ஏன் என்று சொன்னால், அவர் சொல்வதெல்லாம் உண்மை என்று மக்களிடத்திலே அந்த செய்தி சென்று விடக்கூடாது. அம்மா அவர்கள் எனக்கு நற்சான்று கொடுத்தார் என்று அடிக்கடி தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் .

தேனியில் நான் தலைமை தாங்கினேன்!

அம்மா அவர்கள் நம்மோடு இருந்த போது, இதே தேனி மாவட்டத்தில் இவர்தான் அதிகாரம் மையம் என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, 2010 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு உரிமை போராட்டத்திற்கு இவரை தள்ளி வைத்துவிட்டு அம்மா அவர்கள் இந்த சாமானிய தொண்டரான இந்த உதயகுமாரை தான் தேனி மாவட்டத்தில் தலைமை தாங்க உத்தரவிட்டார்கள்.

அதே 2010 ஆம் ஆண்டு இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையிலே செயல் வீரர்கள் கூட்டம் நடத்துகிற போது இவரை தள்ளி வைத்துவிட்டு அம்மா அவர்கள் என்னை அந்த செயல் கூட்டத்தில் கலந்து கொள்ள, தேனி மாவட்டத்துடன் வளர்ச்சிக்காக ஆலோசனை வழங்குவதற்கு இந்த சாமானிய தொண்டன் உதயகுமாருக்கு ஆணையிட்டார்கள் என்பதும் அந்த வரலாறையும் அவருக்கு நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.

அதேபோன்று 2011 ஆம் ஆண்டு அம்மா அவர்கள் ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன், தேனியில் தங்கத்தமிழ் செல்வன் குடும்ப திருமண விழாவிற்கு என்னை அங்கே பங்கேற்று அம்மாவின் வாழ்த்து செய்தியும், அம்மாவின் பரிசையும் கொடுப்பதற்கு எனக்கு ஆணையிட்டார்கள் என்பதையும் தங்களுடைய மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

தேனி வெற்றிக்காக நான் பாடுபட்டேன் 

நாடாளுமன்றத்தில் வெற்றிக்காக எனக்கு பணியாற்றுகிற வாய்ப்பு கிடைக்கிற போது தலைமைக்கும், இரட்டை இலை விசுவாசமாக நான் பணியாற்றி, தமிழக முழுவதும் வெற்றி வாய்ப்பு நலிதுபோன போது, தேனி மாவட்டத்தில் இரட்டை இலை மலர்ந்தது. அதற்கு இந்த சாமானிய தொண்டனுடைய அந்த விசுவாசமான உழைப்பு என்ன என்பதை நீங்கள் வேண்டுமானால் உங்கள் வசதிக்காக மறந்து இருக்கலாம். அல்லது மறைக்க முயற்சிக்கலாம்.

உங்களுக்கு நேரம் கிடைத்தால் மனசாட்சி இருந்தால் எளிய தொண்டனிடம் விசாரித்து பாருங்கள். நான் விசுவாசத்தோடு இரட்டை இலை சின்னத்திற்காக எப்படி உழைத்தேன் என்பதையும், எப்படி பாடுபட்டேன் என்பதையும் அந்த தொண்டர்கள் சான்றாக சொல்வார்கள்.

அம்மா அவர்கள் தங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை குறைபாட்டில் தான் அப்போது அம்மா அவர்கள் தங்கள் மீது வைத்திருந்த அபிமானத்தை பற்றி இந்த சாமானிய தொண்டான என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள் என்பதை நான் வெளியே சொன்னால் அது அரசியல் நாகரிகமாக இருக்காது.

சத்தியம் செய்து சொல்கிறேன்

சத்தியம் செய்து இப்போதும் சொல்கிறேன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வளர்ச்சிக்காக கோடிக்கணக்கான தொண்டர்கள் தங்கள் உதிரத்தை சிந்தி உழைத்து வளர்த்து, இன்னைக்கு மாபெரும் மக்கள் இயக்கமாக இந்த இயக்கத்தின் வழிநடத்தி வரும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணையிட்டால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா தாயின் மீது ஆணையிட்டு சொல்கிறேன் , அம்மா அவர்களின் மறு வடிவமாக இருக்கிற எடப்பாடியார் ஆணையிட்டால் இந்த நிமிடமே தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்கிற பொறுப்பு, கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை பொறுப்பிலிருந்தும், மாவட்ட கழக செயலாளர், ஏன் சட்டமன்ற உறுப்பினர் என்கிற பொறுப்பணியில் கூட கழகத்தினுடைய வளர்ச்சிக்காக, கழகத்தினுடைய வெற்றிக்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய அந்த வெற்றியை வரலாறுக்காக நான் என்னை தியாகம் செய்துவிட்டு ஒரு நாளும் தயங்கவில்லை இந்த நிமிடமே அனைத்து பொறுப்புகளில் இருந்தும் என்னை விடுவித்துக் கொள்வதற்கும் நான் தயங்குவது அல்ல?

உங்கள் இடத்தில் நான் உள்ளேன்!

அன்றைக்கு அம்மா அவர்கள் இருந்தபோது டாக்டர் வெங்கடேஷ் அவர்கள் சோபாவில் அமர்ந்திருந்த போது, இந்த உதயகுமார் எந்த இடத்தில் அமர்ந்திருந்தார் என்று சொன்னால் அரசியல் நாகரீகமாக இருக்காது என்று நீங்கள் சொல்லி உள்ளீர்கள். தயவு செய்து அதை சொல்லுங்கள், உங்களுடன் நான் எந்த நிலையில் அமர்ந்திருந்தேன் என்பதை நீங்கள் சொல்லுங்கள். நீங்கள் உட்கார்ந்து இருந்த இடத்திலே தான் நானும் உட்கார்ந்திருந்தேன். ஆகவே தயவு செய்து நீங்கள் ஏதோ ஒரு மூடுமந்திரம் போல நீங்கள் வைத்திருப்பதனால் என்மீது ஒரு தவறான அபிப்பிராயத்தை என் கழகப் பணி மீது ,நான் தலைமை மீதும் கொண்டிருக்கும் விசுவாசத்தின் மீதும் நீங்கள் களங்கும் கற்பிக்க முயற்சிப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் இதை வேதனையில் இருந்து நீங்கள் விரத்தியின் விளிம்பிலே இருந்து கேட்ட கேள்விக்கு நான் வேதனையின் உச்சியில் இருந்து உங்கள் கவனத்திற்கு நான் வைக்கின்றேன்.

பதவிகளை துறக்க தயார்

கட்சி ஒற்றுமையாக இருப்பதற்கு யாருமே தடையாக இல்லை அதை இந்த தொண்டர்கள் நன்கு அறிவார்கள் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் பிரச்சனை உங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்பதுதான் பிரச்சனையினுடைய ஆரம்பம் சரி ,மையமும் வரை ஏற்படுத்தி வருகிறேர்கள்

எத்தனை முறை சமாதான பேச்சு வார்த்தைகள் நேரடியாக நடைபெற்றது என்பது நீங்கள் உங்களுக்கு நேரம் கிடைத்தால் ஒரு நிமிடம் மனசாட்சி எனக்கு கேளுங்கள் அத்தனை முன்னாள் அமைச்சர்களும், தலைமைக் கழக நிர்வாகிகளும் நீங்கள் பெற்றெடுத்த மகள் அவர்களுடைய இல்லங்களில் நேரிலே வந்து இரவு முழுவதும் பேச்சுவார்த்தை நடத்துகிற போது கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் அது வலிமையாக இருக்க வேண்டும் இது அம்மா உழைத்து உயிரைக் கொடுத்து உருவாக்கிய இந்த இயக்கம் கோடான கோடி தொண்டர்கள் உதிரத்தை சிந்தி வளர்த்த இந்த இயக்கம் உங்கள் ஒருவருக்காக இந்த இயக்கத்தை நீங்கள் பழி கொடுத்து விடாதீர்கள், பேசினோம்

ஆனால் இன்றைக்கு நீங்கள் ஒற்றுமைக்காக ஏதோ தடையாக இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள். இனியும் அப்பாவி தொண்டர்களை நீங்கள் ஏமாற்ற வேண்டாம். இந்த சோதனைகளை எல்லாம் நீங்கள்ஏற்படுத்தியதுதான். வெளியில் இருந்து யாரும் இந்த சோதனையும் ஏற்படுத்தவில்லை. இந்த நிமிடமே எடப்பாடியார் உத்தரவிட்டால் என் பொறுப்புகளை துறக்க தயாராக இருக்கிறேன். 

பலாப்பழம் சின்னத்தில் நிற்க காரணம் யார்?

பலாப்பழத்தில் நிற்பதற்கு யார் காரணம்? நீங்கள் பதவி ஆசையினாலே மத்திய அமைச்சராகி விடலாமா என்ற ஆசை. அங்கு என்ன விபரங்கள் எல்லாம் பேசப்பட்டது எல்லா விவரங்களும் எனக்கு அரசியல் நாகரிகம் கருதி நான் அதை சொல்லவில்லை. தேனி மாவட்டத்தில் அதிகாரம் தங்கள் பிள்ளைக்கு வேண்டும் என்று தான் நினைத்தீர்களே, யாராவது உருவாக்கி உள்ளீர்களா இரட்டை இலை என்பது வாழ்வுக்கு சமம் அதை எதிர்ப்பு நிற்பது இறப்புக்கு சமம். 

தங்க தமிழ்ச்செல்வன் முதல் நயினார் வரை

உங்களுடைய சுயநலத்திற்காக அதிகாரத்திற்காக நீங்கள் உண்மையை மறைத்து செயல்பட்டீர்கள். அது தங்க தமிழ்ச்செல்வன் தொடங்கி நைனார் நாகேந்திரன் தொடங்கி வரை உங்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும். இதுதான் நீங்கள் கடைபிடித்த பாதை தர்மம் ஆகவே எனக்கு எச்சரிக்கை விடுகிற தகுதி உங்களுக்கு இல்லை நான் எந்த எச்சரிக்கையும் எதிர்கொள்வதற்கு தயாராகத்தான் இருக்கிறேன் இன்னும் விவாதிக்க வேண்டும் என்று நீங்கள் விருப்பப்பட்டால் நான் தயாராக இருக்கிறேன். இன்றைக்கு உங்களுக்கு வேஷ்டி கட்ட கூட முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது இதற்கு என்ன காரணம் என்ன காரணம்? அதற்கு என்ன காரணம் இதையெல்லாம் நீங்கள் ஒரு நிமிடம் இதற்கு உண்மையான விடை கிடைக்கும்.

Kathiravan V

TwittereMail
காஞ்சி கதிரவன், 2016ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். இயந்திரவியல் பட்டயப்படிப்பு, இளங்கலை அரசியல் அறிவியல், முதுகலை வணிக மேலாண்மை படித்து உள்ளார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அரசியல், நாட்டு நடப்பு, தொழில்முனைவு, வரலாறு, ஆன்மீகம் சார்ந்த செய்திகளில் பங்களித்து வருகிறார். அபுனைவு நூல்கள் வாசிப்பும், உரைகள் கேட்டலும், உரையாடல்களும் இவரது பொழுதுபோக்கு.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.