பொன்முடி Vs செங்கோட்டையன்: ’பொன்முடி பேச்சால் 234 தொகுதிகளும் அதிமுக வெற்றி பெறும்!’ செங்கோட்டையன் நம்பிக்கை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  பொன்முடி Vs செங்கோட்டையன்: ’பொன்முடி பேச்சால் 234 தொகுதிகளும் அதிமுக வெற்றி பெறும்!’ செங்கோட்டையன் நம்பிக்கை!

பொன்முடி Vs செங்கோட்டையன்: ’பொன்முடி பேச்சால் 234 தொகுதிகளும் அதிமுக வெற்றி பெறும்!’ செங்கோட்டையன் நம்பிக்கை!

Kathiravan V HT Tamil
Published Apr 18, 2025 11:15 AM IST

”பெண்களையும் கொச்சைப்படுத்தி பேசுவதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? பொன்முடி அமைச்சராக இருக்க தகுதியற்றவர்"

பொன்முடி Vs செங்கோட்டையன்: ’பொன்முடி பேச்சால் 234 தொகுதிகளும் அதிமுக வெற்றி பெறும்!’ செங்கோட்டையன் நம்பிக்கை!
பொன்முடி Vs செங்கோட்டையன்: ’பொன்முடி பேச்சால் 234 தொகுதிகளும் அதிமுக வெற்றி பெறும்!’ செங்கோட்டையன் நம்பிக்கை!

பொன்முடியை எதிர்த்து ஆர்ப்பட்டம் 

சைவ மற்றும் வைணவ சமய குறியீடுகளை விலை மாதுக்களுடன் ஒப்பிட்டு பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்தும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரியும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கோபிச்செட்டிப்பாளையம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.எஸ். செங்கோட்டையன், அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். 

"பொன்முடிக்கு அமைச்சராக இருக்க தகுதியில்லை"

ஆர்ப்பாட்டத்தில் பேசிய செங்கோட்டையன், பொன்முடியின் பேச்சு மக்களின் மனங்களை, குறிப்பாக பெண்களின் உணர்வுகளை காயப்படுத்தியதாக குற்றம்சாட்டினார். "ஒவ்வொரு வார்த்தையும் மக்களின் நெஞ்சங்களில் கூர்வாளாகப் பாய்ந்து கொண்டிருக்கிறது. இதனால்தான் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ”பெண்களையும் கொச்சைப்படுத்தி பேசுவதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? பொன்முடி அமைச்சராக இருக்க தகுதியற்றவர்," என அவர் காட்டமாக தெரிவித்தார்.

மேலும், பொன்முடியின் பேச்சு திமுக அரசை தடுமாறச் செய்துள்ளதாகவும், இதுபோன்ற செயல்கள் நாட்டின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் செங்கோட்டையன் விமர்சித்தார். "234 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இந்த அரசில், 30 அமைச்சர்கள் இப்படி நடந்து கொண்டால், நாடு என்னவாகும்?" என அவர் கேள்வி எழுப்பினார்.

"திமுக அரசு தவறான பாதையில் செல்கிறது"

திமுக அரசு தவறான பாதையில் செல்வதாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்று, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் "நல்லாட்சியை" மீண்டும் கொண்டுவரும் எனவும் செங்கோட்டையன் உறுதியளித்தார். "இந்த அரசு மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதை நிறுத்த வேண்டும். இல்லையெனில், மக்கள் பதிலடி கொடுப்பார்கள்," என அவர் எச்சரித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு நன்றி

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்த செங்கோட்டையன், "எத்தனையோ வேலைகளை விட்டுவிட்டு, இந்த அநீதியை எதிர்த்து நீங்கள் இங்கு கூடியிருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றி," என உருக்கமாக கூறினார். மேலும், கொடிவேறு அணையையும், காவிரிபாளையம் ஏரியையும் சுற்றுலா மையங்களாக மாற்றுவதற்கு அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.