Thiruparankundram: பாரம்பரிய பல்லுயிர் பாதுகாப்பு தலமாக மாறும் திருப்பரங்குன்றம்! அறநிலையத்துறை அனுமதி தருமா?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Thiruparankundram: பாரம்பரிய பல்லுயிர் பாதுகாப்பு தலமாக மாறும் திருப்பரங்குன்றம்! அறநிலையத்துறை அனுமதி தருமா?

Thiruparankundram: பாரம்பரிய பல்லுயிர் பாதுகாப்பு தலமாக மாறும் திருப்பரங்குன்றம்! அறநிலையத்துறை அனுமதி தருமா?

Kathiravan V HT Tamil
Published Feb 17, 2025 11:42 AM IST

Biodiversity Heritage Site: காடழிப்பு, மாசுபாடு, நகரமயமாக்கல் போன்ற மனித நடவடிக்கைகளால் ஆபத்தில் இருக்கக்கூடிய பல்வேறு தாவர மற்றும் விலங்கு இனங்களைப் பாதுகாக்க பாரம்பரிய பல்லுயிர் தளங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன.

Thiruparankundram: பாரம்பரிய பல்லுயிர் பாதுகாப்பு தலமாக மாறும் திருப்பரங்குன்றம்! வனத்துறையின் பலே திட்டம்!
Thiruparankundram: பாரம்பரிய பல்லுயிர் பாதுகாப்பு தலமாக மாறும் திருப்பரங்குன்றம்! வனத்துறையின் பலே திட்டம்!

திருப்பரங்குன்றம், ஹார்விபட்டியை சேர்ந்த இளங்கோ என்பவர் மதுரை வனச்சரக அலுவலருக்கு, திருப்பரங்குன்றம் மலையை பாரம்பரிய பல்லுயிர் தலமாக அறிவிக்க கோரி மனு அளித்து இருந்தார்.  அம்மனு தொடர்பாக மதுரை வனச்சரக அலுவலர் விளக்கம் அளித்து பதில் எழுதி உள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாடில் உள்ள மலை

அதில், 29.01.2025 ஆம் தேதி களத்தணிக்கை மேற்கொண்டதில் புகார் மனுவில் குறிப்பிட்ட பகுதியில் மாநகராட்சி சூழியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்படி இடமானது இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது எனத் தெரியவருகிறது. மேலும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள இடத்தில் பல்வேறு வகையான மரங்கள் அடந்து காணப்படுகிறது. திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பந்தப்பட்ட துறை அனுமதிக்கும் பட்சத்தில் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் நடவு தொடர்பான திட்டங்கள் அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். 

தடையில்லா சான்று பெறுவது முக்கியம்

மேலும், மேற்படி இடம் இந்து சமய அறநிலயத்துறைக்கு சொந்தமான இடம் என்பதால், இந்து சமய அறநிலயத்துறையின் தடையில்லா சான்று வழங்கிய பின்னர் பல்லுயிர் பாதுகாப்பு ஸ்தலமாக அறிவிக்கை செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளபடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் . மேலும் மனுவில் குறிப்பிட்டுள்ள இடத்தினை பாரம்பரிய பல்லுயிர் பாதுகாப்பு ஸ்தலமாக அறிவிக்கை செய்ய இந்து சமய அறநிலையத் துறையிடம் தடையில்லா சான்று வழங்க கோரி இவ்வலுவலக கடிதம் மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பாரம்பரிய பல்லுயிர் தளம் என்றால் என்ன?

இந்தியாவில் உயிரியல் பன்முகத்தன்மை சட்டம் 2002 இன் கீழ் பல்லுயிர் பாரம்பரிய தளங்கள் அறிவிக்கப்படுகின்றது. இந்த தளங்கள் அரிதான, அழிந்து வரும் அல்லது உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உட்பட குறிப்பிடத்தக்க உயிரியல் பன்முகத்தன்மையைக் கொண்ட தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகளாகும். மேலும் இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளின் சமநிலையைப் பாதுகாப்பதற்கு அவை முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.

பல்லுயிர் பாரம்பரிய தளங்களின் முக்கிய அம்சங்கள்:-

வளமான பல்லுயிர்

பாரம்பரிய பல்லுயிர் பாதுகாப்பு தளம் என்பது அதிக அளவிலான உயிரியல் பன்முகத்தன்மையைக் கொண்ட பகுதிகள், பெரும்பாலும் அழிந்து வரும் அல்லது அரிதான உயிரினங்கள், தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகள் அல்லது குறிப்பிடத்தக்க மரபணு பன்முகத்தன்மையை கொண்ட பகுதிகளை கொண்டு உள்ளன. 

சுற்றுச்சூழல் முக்கியத்துவம்

இந்த தளங்கள் சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியத்தையும் செயல்பாட்டையும் பராமரிப்பதில், மகரந்தச் சேர்க்கை, நீர் சுத்திகரிப்பு மற்றும் கார்பன் பிரித்தெடுத்தல் போன்ற சுற்றுச்சூழல் செயல்முறைகளை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பாதுகாப்பு 

இந்த தளங்கள் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகின்றன, மேலும் பல்லுயிர் சிதைவு அல்லது இழப்பைத் தடுக்க பாதுகாப்பு முயற்சிகள் செயல்படுத்தப்படுகின்றன. இப்பகுதியின் இயற்கை பாரம்பரியத்தில் குறைந்தபட்ச தாக்கத்தை உறுதி செய்வதற்காக மனித செயல்பாடு ஒழுங்குபடுத்தப்படுகிறது.

கலாச்சார மற்றும் பாரம்பரிய மதிப்பு

கலாச்சார, வரலாற்று அல்லது மத முக்கியத்துவத்தையும் பாரம்பரிய பல்லுயிர் தளங்கள் கொண்டு உள்ளன. சில தளங்களில் புனித தோப்புகள், பாரம்பரிய பாதுகாப்பு பகுதிகள் அல்லது பழங்குடி சமூகங்கள் சார்ந்த பகுதிகள் இருக்கலாம்.

பல்லுயிர் பாதுகாப்பு தளங்கள் ஏன் முக்கியம்?

காடழிப்பு, மாசுபாடு, நகரமயமாக்கல் போன்ற மனித நடவடிக்கைகளால் ஆபத்தில் இருக்கக்கூடிய பல்வேறு தாவர மற்றும் விலங்கு இனங்களைப் பாதுகாக்க பாரம்பரிய பல்லுயிர் தளங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. 

 

Kathiravan V

TwittereMail
காஞ்சி கதிரவன், 2016ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். இயந்திரவியல் பட்டயப்படிப்பு, இளங்கலை அரசியல் அறிவியல், முதுகலை வணிக மேலாண்மை படித்து உள்ளார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அரசியல், நாட்டு நடப்பு, தொழில்முனைவு, வரலாறு, ஆன்மீகம் சார்ந்த செய்திகளில் பங்களித்து வருகிறார். அபுனைவு நூல்கள் வாசிப்பும், உரைகள் கேட்டலும், உரையாடல்களும் இவரது பொழுதுபோக்கு.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.