TN Assembly: சரமாரியாக கேள்வி எழுப்பிய எம்எல்ஏக்கள்.. அசால்டாக பதிலளித்த அமைச்சர்கள்.. பேரவையில் இன்று நடந்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn Assembly: சரமாரியாக கேள்வி எழுப்பிய எம்எல்ஏக்கள்.. அசால்டாக பதிலளித்த அமைச்சர்கள்.. பேரவையில் இன்று நடந்தது என்ன?

TN Assembly: சரமாரியாக கேள்வி எழுப்பிய எம்எல்ஏக்கள்.. அசால்டாக பதிலளித்த அமைச்சர்கள்.. பேரவையில் இன்று நடந்தது என்ன?

Karthikeyan S HT Tamil
Published Jan 09, 2025 05:45 PM IST

Tamilnadu Assembly Session 2025: நடப்பாண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நான்காம் நாள் கூட்டத்தில், உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து பேசியது குறித்தும் சட்டப்பேரவையில் இன்று நடந்தவைகள் குறித்தும் சுருக்கமாக விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Tamilnadu Assembly Session 2025: சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Tamilnadu Assembly Session 2025: சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அமைச்சர் துரைமுருகன் பதில்

குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து பேசுகையில், "கடந்தாண்டு 89 தடுப்பணைகள் கட்ட அரசாணை வெளியிடப்பட்டு 60 தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு அதிகமான தடுப்பணைகள் கட்ட வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்" என்றார்.

அமைச்சர் கே.என்.நேரு பதில்

ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் நேரு பதிலளித்து பேசுகையில், "கழிவு நீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண 946 கோடியில் வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 11 கழிவு நீர் அகற்றும் நிலையம்மூலம் அகற்றப்பட்டு வருகிறது. வடசென்னை பகுதியில் கழிவுநீர் குழாய்கள் 40 முதல் 50 ஆண்டுகள் பழமையானதாக உள்ளதால் அதனை மாற்றும் பணி வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெறும். எந்த இடங்களில் உடனடி தேவை என்பதைக் குறிப்பிட்டால் உடனடியாக முன்னுரிமை தந்து பணிகள் முடிக்கப்படும்" என்றார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

"தமிழ்நாட்டில் ரூ.60 கோடி மதிப்பில் புதிதாக 50,000 சுகாதார நிலையங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வருகின்றன. அவை அனைத்திலும் பணி நியமனங்கள் முடிவடைந்து"

அமைச்சர் சேகர்பாபு பதில்

"திருக்கோயில்களில் பயன்படாத நகைகள் உருக்கப்பட்டு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் கிடப்பில் இருந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து திருக்கோயில்களில் பயன்படாத நகைகளை உருக்கி இதுவரை 1,100 கிலோ தங்கக் கட்டிகள் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆண்டுக்கு ரூ.11 கோடி திருக்கோயில்களுக்கு வருமானமாக ஈட்டப்பட்டிருக்கிறது" என்று ஆலங்குளம் உறுப்பினர் மனோஜ் பாண்டியனின் கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு இவ்வாறு பதிலளித்தார்.

யுஜிசி வரைவு விதிமுறைகளுக்கு எதிர்ப்பு - தனித்தீர்மானம்

யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிப்பது தொடர்பாக யு.ஜி.சி. வெளியிட்ட விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தினார். யுஜிசியின் நடவடிக்கை, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கோட்பாடான கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. நீட் தேர்வு மூலமாக மருத்துவகனவை சிதைக்கும் செயலை பல ஆண்டுகளாக ஒன்றிய அரசு செய்து வருகிறது. எல்லா முறைகேடும் நடக்கும் நம்பர் ஒன் தேர்வாக நீட் தேர்வு உள்ளது எனத் தெரிவித்தார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 ஏன் இல்லை? - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 ஏன் இல்லை? என சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், "பொங்கல் தொகுப்புக்காக தமிழ்நாடு அரசு ரூ. 280 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ஒன்றிய அரசிடம் ரூ. 37,000 கோடி கேட்கப்பட்டது. ஆனால், ரூ. 276 கோடி மட்டுமே கிடைத்தது. எஸ்.எஸ்.ஏ திட்டத்தில் ரூ 2100 கோடியை ஒன்றிய அரசு வழங்கவில்லை. இதனால், மாநில அரசியின் நிதியைக் கொண்டே அவை ஈடுகட்டப்படுகின்றன. இந்த காரணங்களால்தான் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ, 1000 வழங்க முடியவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.