தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Fir Registered Against Electricity Board Coal Transport Scam Given By Arapoor Movement

’மின்சார வாரியத்தில் 908 கோடி ஊழல்’ அறப்போர் இயக்க புகாருக்கு FIR பதிவு

Kathiravan V HT Tamil
Mar 03, 2023 08:16 PM IST

2011 முதல் 2016 வரை 908 கோடி ரூபாய் ஊழல் நடந்தது ஊர்ஜிதம் ஆகியுள்ளதால் 10 பேர் மீது இந்த வாரம் 27/2/2023 அன்று FIR பதிவு

தமிழ்நாடு மின்சார வாரியம்
தமிழ்நாடு மின்சார வாரியம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த ஊழல் தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு அறப்போர் இயக்கம் வெளியிட்ட பத்திரிக்கை செய்தி 

இதில் 2011 முதல் 2016 வரை 1028 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதற்கான ஆதாரங்களை அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் 2018 ஆம் ஆண்டு சமர்ப்பித்து இருந்தது. இதன் மீது விரிவான விசாரணையை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை 2011 முதல் 2016 வரை 908 கோடி ரூபாய் ஊழல் நடந்தது ஊர்ஜிதம் ஆகியுள்ளது என்று கூறி இதற்கு காரணமான முன்னாள் தலைமை பொறியாளர்கள் கண்காணிப்பு பொறியாளர்கள் செயற்பொறியாளர்கள் மற்றும் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகத்தினர் மொத்தம் 10 பேர் மீது இந்த வாரம் 27/2/2023 அன்று FIR பதிந்துள்ளது என தெரிவிக்கப்ட்டுள்ளது.

மேலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யபப்ட்ட நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை இதன் மீது விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

IPL_Entry_Point